Get your own calendar

Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4

Powered by Blogger

Outsourcing, IT outsourcing, and Offshore Outsource Company.
Outsourcing

________________

Click Here To Earn Money

Tuesday, August 22, 2006

ஆண்டாண்டு காலமதாய் நாம்

இப்பாடல் குட்டிக்கண்ணனால் பாடப்பட்டு பிரபலமான பாடல். வீதி நாடகங்கள் உட்பட பல இசைநிகழ்ச்சிகள் இப்பாடல் கட்டாயம் இடம்பெறும். ஏராளமானோரைக் கவர்ந்தது இப்பாடல். எளிமையான இசை, அழகான வரிகள்.





பாடியவர் - குட்டிக் கண்ணன்
இசை - தமிழீழ இசைக்குழு
வரிகள் - முல்லைச்செல்வன்


ஆண்டாண்டு காலமதாய் நாம்
ஆண்டு வந்த பூமி
அப்பன் ஆச்சி பாட்டன் பூட்டி
சுத்தி வந்த வீதி
எங்கள் அக்கா அண்ணையரே
எதிரி இங்கு வரலாமா
எங்கள் மண்ணை ஆள நினைச்சா
வேங்கை நாங்க விடலாமா
(ஆண்டாண்டு)

வீட்டுக்கொரு வீரன் போனா
விடுதலையும் நாளை வரும்
வீதியிலே சுத்தித் திரிஞ்சா
அடிமையாகச் சாக வரும்
ஆட்டம் போடும் ராணுவங்கள்
அலறி ஓடணும் . நாம்
அடிமை இல்லை என்று புதிய
பரணி பாடணும்
(ஆண்டாண்டு)

எங்கள் வேங்கைத் தலைவன் தானே
எங்களுக்கு வழிகாட்டி
எதிரிகளின் பாசறை யாவும்
எரித்திடுவோம் தீ மூட்டி
பொங்கி எழு புயலாக
போர்க்களத்தில் விளையாடு
புனையட்டும் தமிழீழம்
புதிய வீர வரலாறு
(ஆண்டாண்டு)

என்னினமே என் சனமே
இன்னும் என்ன மயக்கமா
எதிரிகளின் பாசறை யாவும்
எரித்திடவே தயக்கமா
பண்டாரவன்னியனின்
வாரிசல்லவா - பகையை
பந்தாடி வென்றிடவே
ஆசையில்லையா
(ஆண்டாண்டு)

_______________________________

பாடலைத் தரவிறக்க

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Friday, June 30, 2006

அடைக்கலம் தந்த வீடுகளே

பிரபல சினிமாப்பாடகர் மலேசியா வாசுதேவன் பல ஈழப்போராட்டப் பாடல்களைப் பாடியிருப்பது தெரியும். அவற்றில் இதுவுமொரு பாடல்.

இராணுவ முற்றுகைக்குள்ளும் சுற்றிவளைப்புக்குள்ளும் தங்களைப் பொத்திப் பாதுகாத்தவர்களுக்கு விடைபெறும்போது புலிவீரன் பாடுவதாக அமைந்தது இப்பாடல்.
நல்ல இசை. நல்ல குரல்.

குரல்: மலேசியா வாசுதேவன்
இசை: தேவேந்திரன்
இசைத்தட்டு: களத்தில் கேட்கும் கானங்கள்

அடைக்கலம்_தந்த_வீட...






அடைக்கலம் தந்த வீடுகளே
போய் வருகின்றோம் நன்றி -நெஞ்சை
அடைக்கும் துயர் சுமந்து செல்கின்றோம் -உங்கள்
அன்புக்கு புலிகள் நன்றி

நாங்கள் தேடப்படும் காலத்தில் நீங்கள்
கதவு திறந்தீர்களே -எம்மை
தாங்கினால் வரும் ஆபத்தை எண்ணி
பார்க்க மறந்தீர்களே
பார்க்க மறந்தீர்களே...பார்க்க மறந்தீர்களே..

எங்கள் உடல்களில் ஓம் செங்குருதி
உங்கள் சோறல்லவா உங்கள் சோறல்லவா -நாங்கள்
தங்கியிருந்த நாள் சிலநாள் என்றாலும்
நினைவு நூறல்லவா
நினைவு நூறல்லவா...நினைவு நூறல்லவா...

பெற்றோரை உறவை பிரிந்திருந்தோம் -அந்த
இடைத்தை நிறைத்தீர்களே -மாற்றான்
முற்றுகை நடுவில் மூடியெமையுங்கள்
சிறகால் மறைத்தீர்களே
சிறகால் மறைத்தீர்களே...சிறகால் மறைத்தீர்களே...
_________________________________

பாடலைத் தரவிறக்க

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



__________________

Google
 
Web eelapadalhal.blogspot.com

Padi Pathivu

Your Ad Here

Pooraayam
Your Ad Here

_______________