Get your own calendar

Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4

Powered by Blogger

Outsourcing, IT outsourcing, and Offshore Outsource Company.
Outsourcing

________________

Click Here To Earn Money

Sunday, November 26, 2006

சூரியதேவனின் வேருகளே - மாவீரர்நாட் பாடல்

இன்று தமிழீழ மாவீரர் நாள்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்தவர்களை நினைவுகூரும் நாள்.
அவர்கள் நினைவாக ஒருபாடல் 'ஈழப்பாடல்கள்' வலைப்பதிவில் இடம்பெறுகிறது.

இப்பாடல், ஒவ்வொரு வித்துடல் விதைப்பின்போதும் ஒலிக்கவிடப்படும்.
வித்துடலோ, நினைவுப்படமோ வீட்டிலிருந்து துயிலுமில்லம் எடுத்துச் செல்லப்படும் வழியில் ஒலிக்கவிடப்படும்.
பின் இறுதி மலர்வணக்கம் நடைபெறும்போதும் விதைகுழியில் விதைக்கப்படும்போதும் இப்பாடல்தான் ஒலிக்கவிடப்படும்.

இப்பாடலை அச்சந்தர்ப்பங்களில் கேட்காதவர்களுக்கு இப்போது எவ்வகை உணர்வு வருமென்று தெரியவில்லை. ஆனால் வித்துடல் விதைப்பு நிகழ்வுகளில் நேரடியாகப் பங்கெடுத்த அனுபவமுள்ளவர்களுக்கு இப்போது கேட்டாலும் இப்பாடல் மிகுந்த உணர்வுப்பெருக்கைத் தரக்கூடியது.
சாதாரண நேரங்களில் பத்தோடு பதினொன்றாக இப்பாடலைக் கேட்கும் துணிவு எனக்கில்லை. பாடலின் இசை கேட்டாலே பங்குகொண்ட சில நூறு வித்துடல் விதைப்புக்களும் விதைக்கப்பட்டவர்களும்தாம் ஞாபகம் வருகிறார்கள்.

இசை: முரளி
பாடியவர்கள்: சாந்தன், சுகுமார் உட்பட பலர்.






சூரியதேவனின் வேருகளே
ஆயிரம் பூக்களை சூடுகிறோம்
போரினில் ஆடிய வேருகளே -விட்டு
போகின்ற நேரத்தில் பாடுகின்றோம்
போரினில் ஆடிய வேருகளே -விட்டு
போகின்ற நேரத்தில் பாடுகின்றோம்

மடியில் மலர்ந்த மகளே -எங்கள்
குடியில் மலர்ந்த மகனே
விடியும் பொழுதின் கதிரே -புலி
கொடியில் உலவும் உயிரே

கண்களில் நீர்வழிந்து ஓடிடஓடிய
கைகளினால் மலர் சூடுகின்றோம்
காலெடுத்தாடிய தாயகப்பூமியை
காதலித்தீர் உம்மைப் பாடுகின்றோம்

மண்மடி மீதிலே தூங்கிடும் போதிலே
மாலையிட்டோம் உங்கள் தோள்களிலே
மாதவம் செய்த எம் பிள்ளைகளே -நாங்கள்
மண்டியிட்டோம் உங்கள் கால்களிலே

செங்கனி வாய்திறந்து ஓர்மொழி பேசியே
சின்னச் சிரிப்பு ஒன்றை சிந்துங்களே
தேச விடுதலையை தோளில் சுமந்த எங்கள்
செல்வங்களே ஏதும் சொல்லுங்களே

வந்துநின்றாடிய சிங்களச் சேனையை
வாசல்வரை சென்று வென்றவரே
வாழும்வரையும் உங்கள் பாதையிலே செல்லும்
வல்லமை தாருங்கள் கன்றுகளே

_____________________________________________

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Thursday, June 22, 2006

எந்த மாதிரி? அட அந்தமாதிரி

இது ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்ட உவகையில் வெளிவந்த பாடல். ஒருவித நையாண்டித்தன்மையோடு அமைந்த பாடல். சாந்தன், சுகுமார் கூட்டில் வெளிவ்நத இன்னொரு வெற்றிப்பாடல். இவர்கள் இருவரின் கூட்டணியில் பல துள்ளிசைப்பாடல்கள் வெளிவந்து அமோக வரவேற்பைப் பெற்றன. இருவரும் சிறந்த கூட்டாளிகளும்கூட. (ஈழப்போராட்டத்தில் இவர்கள் இருவரினதும் பங்கு மிகக்காத்திரமானது. தனியே பாடகர்கள் என்றில்லாது பல தளங்களிற் செயலாற்றியவர்கள்.)

பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் புதுவை இரத்தினதுரை.
இசையமைப்பு முரளி.

ஈடுவைத்து_ஈடுவைத்த...






ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா -தமிழ்
ஈழம் தரப்போகிறாவே நந்தலாலா
ஆடும்வரை ஆடிவிட்டா நந்தலாலா -இப்போ
ஆனையிறவு எங்களிடம் நந்தலாலா

எந்த மாதிரி அட அந்தமாதிரி
எந்த மாதிரி அட அந்தமாதிரி -தமிழ்
ஈழமெங்கள் கண்ணெதிரே வந்தமாதிரி
சொந்த ஊரிலேறி நாங்கள் சென்ற மாதிரி -எதோ
தேவதைகள் வந்து வரம் தந்தமாதிரி
இந்தமாதிரி வாசம் வீசும் மாதிரி -அட
சந்தனத்தை பூசிக்கொண்டு நின்ற மாதிரி

ஊருக்குள்ளே போகப்போறோம் நந்தலாலா -இப்போ
உள்ளதையும் தந்து போறா நந்தலாலா
மாமனையே நம்பி நம்பி நந்தலாலா -இப்ப
மாரடிச்சுக் கொள்ளிறாவாம் நந்தலாலா

அம்பகாமம் வந்து போனார் நந்தலாலா -இப்போ
ஆட்டிலறி தந்து போனார் நந்தலாலா
அம்மையாரே தந்துபோவார் நந்தலாலா -எங்கள்
அம்பாறையும் வந்துதவும் நந்தலாலா

இந்தியாவுக் கோடிப்போனா நந்தலாலா -இப்போ
இஸ்ரவேலுக்கு ஓடுறாவாம் நந்தலாலா
எங்கு ஓடிப்போயும் என்ன நந்தலாலா -எங்கள்
தம்பி தானே வெல்லப்போறான் நந்தலாலா

ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா -தமிழ்
ஈழம் தரப்போகிறாவே நந்தலாலா
____________________________

பாடலைத் தரவிறக்க

Labels: , , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Friday, May 12, 2006

குனியாது கடல்வேங்கை.

இம்முறை கடற்புலிகள் பற்றிய பாடலொன்று.
பாடியவர்கள்: திருமலைச்சந்திரன், மேஜர் சிட்டு.
இசை: முரளி
பாடல் வரிகள்: புதுவை இரத்தினதுரை.

இது கொழும்புத் துறைமுகத்தில் 1996 ஆம் ஆண்டு கடற்புலிகள் நடத்திய தாக்குதலின் நினைவாக வெளியிடப்பட்ட பாடல்.




கடலின் காற்றே கடலின் காற்றே
எரியும் புலியைத் தழுவிவிடு
உயிரைக் கரைக்கும் புலிகள் மூச்சை
கரையை நோக்கி உலவவிடு

குனியாது கடல்வேங்கை ஒருநாளும் -வைத்த
குறியேதும் தறவாது இடிவீழும்
பணியாது தமிழ் ஈழம் போராடும் -எங்கள்
பகைமீது இனிமேலும் இடிவீழும்

இனியும் இனியும் வெடிகள் அதிரும்
எதிரி வாழும் நாட்டிலே -எம்
இனத்தை எவரும் அடக்க நினைத்தால்
வெடிக்கும் அவரின் வீட்டிலே

***
ஊரிலிருந்து வேரையறுத்து
உறவைக் கலைத்த முகத்திலே
காறியுமிழ்ந்தேறி மிதித்தார்
அவர்கள் துறை முகத்திலே
கரிய புலிகள் இனியும் புதிய
சரிதம் எழுதும் பொழுதிலே
கடலின் புலிகள் படகில் எழுந்தார்
பகைவன் சாவின் விளிம்பிலே

இனியும் இனியும் வெடிகள் அதிரும்
எதிரி வாழும் நாட்டிலே -எம்
இனத்தை எவரும் அடக்க நினைத்தால்
வெடிக்கும் அவரின் வீட்டிலே

***
தலைவன் காட்டும் வழியில் நடந்து
கடலின் வேங்கை விரைந்திடும்
தமிழர் தேசம் விடியும் வரையும்
கரிய புலிகள் உருகிடும்
உலகம் முழுதும் புருவம் உயர
கடலின் புலிகள் நடந்திடும்
தமிழன் நிலத்தை அழிக்கும் பகைவன்
உயிரை புலிகள் குடித்திடும்

இனியும் இனியும் வெடிகள் அதிரும்
எதிரி வாழும் நாட்டிலே -எம்
இனத்தை எவரும் அடக்க நினைத்தால்
வெடிக்கும் அவரின் வீட்டிலே

***
கூட்டைக் கலைத்த கொடியர் இருக்கும்
குகையில் வீழ்ந்த ஒரு அடி
குளறக் குளறக் கடலின் புலிகள்
கொழும்பில் இடிக்கும் பலஇடி
கடலின் புலிகள் எழுவார் எனிலோ
திசைகள் முழுதும் காலிலே
இனிமேல் அதிரும் வெடிகள் முழுதும்
பகைவன் ஊரின் தோளிலே

இனியும் இனியும் வெடிகள் அதிரும்
எதிரி வாழும் நாட்டிலே -எம்
இனத்தை எவரும் அடக்க நினைத்தால்
வெடிக்கும் அவரின் வீட்டிலே


Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



__________________

Google
 
Web eelapadalhal.blogspot.com

Padi Pathivu

Your Ad Here

Pooraayam
Your Ad Here

_______________