19.04.1995 அன்று திருமலைத் துறைமுகத்துள் விடுதலைப்புலிகளால் பாரியதொரு தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதல்தான் மூன்றாம்கட்ட ஈழப்போரைத் தொடக்கி வைத்தது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் ஈழத்தின் கடற்கரையோரங்களில் வாழ்ந்தவர்களுக்கு சூரயா, வீரயா போன்ற போர்க்கலங்களின் பெயர்களைத் தெரியாமலிருக்க முடியாது. அடிக்கடி இக்கலங்களின் தாக்குதலுக்கு முகங்ககொடுக்க வேண்டியிருந்தது. இக்கலங்கள் தமிழர்களிடத்தில் மிகக் கடுமையான இழப்புக்களை மட்டுமன்றி பெரும் பயத்தையும் ஏற்படுத்தியிருந்தன. இவற்றில் சூரயா கடற்கலம் திருமலைத்துறைமுகம் மீதான புலிகளின் கரும்புலித் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது. இத்துடன் ரணசுறு கடற்கலமும் இன்னொரு கடற்கலமும் மூழ்கடிக்கப்பட்டன. இக் கரும்புலித்தாக்குதலை நடத்தி நான்கு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். மதுசா, சாந்தா, தணிகைமாறன், கதிரவன் ஆகிய கடற்கரும்புலிகளே இத்தாக்குதலை நடத்தி வீரச்சாவடைந்தனர்.
இவ்வெற்றியைக் கொண்டாடும் பாடல்தான் இவ்விடுகையில் வரும் பாடல். பாடியவர் திருமலைச்சந்திரன். பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: இசைபாடும் திரிகோணம்.
வீரச்சாவடையும் போராளிகளுக்கு இராணுவநிலையோடு அவர்களின் சாவு அறிவிக்கப்படும். வித்துடல் இருந்தால் அதற்குரிய மரியாதையோடு விதைக்கப்படும். உடல் இல்லையென்றால் நினைவுக்கல் நாட்டப்படும். பின்வரும் நினைவுநாட்களில் அவர்களின் கல்லறையிலோ நினைவுக்கல்லிலோ நினைவுகூரப்படுவர். அதாவது அவர்களின் பெயர், அடையாளங்கள் என்பன வெளிப்படுத்தப்பட்டு உரிய மரியாதையும் கெளரவமும் வழங்கப்படும்.
ஆனால் இவையெதுவும் கிடைக்காமலும் பலர் போராட்டத்துக்காக உயிரை அர்ப்பணிக்கின்றனர். அதுவும் தற்கொடைத் தாக்குதலைச் செய்கின்றனர். அவர்களின் பெயர்களோ தகவல்களோ வெளிவிடப்பட மாட்டா. எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் வெளியில் வரா. கல்லறைகளோ நினைவுக்கற்களோ இரா. மாவீரர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இடம்பெறா. சம்பந்தப்பட்ட சிலருடன் மட்டும் உறங்கிப்போகும் உண்மைகள்.
இவர்களைக் குறிப்பதே 'மறைமுகக் கரும்புலிகள்' என்ற சொற்பதம். போராட்டத்தின் முக்கியமான காலகட்டங்களில் தடைநீக்கிகளாகச் செயற்பட்டு மடிந்தவர்கள். தம் சுயத்தையே அழிக்கும் மனத்திடமும் விருப்பமும் இவர்களிடமுண்டு. இவர்கள் பற்றிய ஒரு பாடல்தான் இது. திருமலைச்சந்திரனின் குரல் அருமையாக உணர்வை வெளிப்படுத்துகிறது. இன்றைய நாளில் இவர்கள் பற்றிய பாடலொன்றைப் பதிவாக்குவது பொருத்தமானதும்கூட.
கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை நீங்களில்லை என்றுஎங்கள் வாய்கள் சொல்லவில்லை
(பாடல் வரிகளை முற்றுமுழுதாகச் சரியாக எழுதினேனா என்று தெரியவில்லை.)
காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று புரிந்திடாத மொழியினோடு பாடுது ஒரு பாட்டு வாசல் வந்து ஆடுகின்ற பிள்ளை நிழல்பார்த்து வாடுமந்த தாய்களின்றி கேட்க வந்த கூற்று வாய்களின்றி பாடுதிங்கே காலநதிக்காற்று வராற்றில் மூன்று பக்கம் விரிந்ததம்மா நேற்று
தேசமெங்கும் தேடுகின்ற விழிகளிங்கு ஆயிரம் வாசமலர் கையெடுத்து நின்றகாலை ஆயிரம் வீதியெங்கும் சுடரெத்த சாகும்பொழுதிலே -விழி நீரெடுத்து விளக்கெரித்தோம் எங்கள் மனதிலே கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை நீங்களில்லை என்றுஎங்கள் வாய்கள் சொல்லவில்லை
பந்தலிட்ட நினைவுக் கோயில் படங்கள் தேடுதும்மை விந்தையென்று உலகம் இன்று சொல்லி நிற்குதும்மை சுவரில்லாடும் முகங்கள் இன்று தேடுதெங்கள் கண்கள் சுவரில்லாமல் வரைந்து விட்ட ஓவியங்கள் நீங்கள் வார்த்தையின்றி பாடுமோசை காற்றில் கேட்கவில்லை காத்திருந்த விழியில் உங்கள் முகங்கள் மாறவில்லை
மழை குளித்த மரங்கள் மீது தளிர் திறக்குது -எங்கள் மல்லிகையில் புதியதொரு முகை பிடிக்குது வெற்றி வாகை தோன்றி காலை உலகை தொழுகுது -இந்த செய்தியெல்லாம் நீங்களென்று காலம் சொல்லுது கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை நீங்களில்லை என்றுஎங்கள் வாய்கள் சொல்லவில்லை
காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று புரிந்திடாத மொழியினோடு பாடுது ஒரு பாட்டு ஊர்களின்றி பேர்களின்றி போன செய்தி கேட்டு வாசலெங்கும் வீசுமென்று தேடுதிங்கு காற்று
திருமலை மீது இன்னொரு பாடல். இசைபாடும் திரிகோணம் இசைநாடாவில் இடம்பெற்ற பாடலிது. திருமலை மீட்பைப் பற்றிய பாடல். இப்போது கேட்க இனிக்கிறது. நீங்களும் கேளுங்கள்.
பாடியவர்களுள் ஒருவர் திருமலைச் சந்திரன். மற்றவர் யாரென்று தெரியவில்லை. பாடலுக்கு முன்பு இசைத்தட்டின் அறிமுகமும் வருகிறது. பொறுமையற்றவர்கள் சற்று இழுத்துவிட்டு பாட்டைக் கேட்கவும்
வீரச்சாவடையும் போராளிகளுக்கு இராணுவநிலையோடு அவர்களின் சாவு அறிவிக்கப்படும். வித்துடல் இருந்தால் அதற்குரிய மரியாதையோடு விதைக்கப்படும். உடல் இல்லையென்றால் நினைவுக்கல் நாட்டப்படும். பின்வரும் நினைவுநாட்களில் அவர்களின் கல்லறையிலோ நினைவுக்கல்லிலோ நினைவுகூரப்படுவர். அதாவது அவர்களின் பெயர், அடையாளங்கள் என்பன வெளிப்படுத்தப்பட்டு உரிய மரியாதையும் கெளரவமும் வழங்கப்படும்.
ஆனால் இவையெதுவும் கிடைக்காமலும் பலர் போராட்டத்துக்காக உயிரை அர்ப்பணிக்கின்றனர். அதுவும் தற்கொடைத் தாக்குதலைச் செய்கின்றனர். அவர்களின் பெயர்களோ தகவல்களோ வெளிவிடப்பட மாட்டா. எப்போதாவது எதிரி தன் விசாரணையில் சம்பந்தப்பட்டவரின் அடையாளங்களை உறுதிப்படுத்தினாலொழிய இவர்கள் பற்றிய தரவுகள் வெளியில் வரா. கல்லறைகளோ நினைவுக்கற்களோ இரா. மாவீரர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இடம்பெறா. சம்பந்தப்பட்ட சிலருடன் மட்டும் உறங்கிப்போகும் உண்மைகள்.
இவர்களைக் குறிப்பதே 'மறைமுகக் கரும்புலிகள்' என்ற சொற்பதம். போராட்டத்தின் முக்கியமான காலகட்டங்களில் தடைநீக்கிகளாகச் செயற்பட்டு மடிந்தவர்கள். தம் சுயத்தையே அழிக்கும் மனத்திடமும் விருப்பமும் இவர்களிடமுண்டு.
இவர்கள் பற்றிய ஒரு பாடல்தான் இது. திருமலைச்சந்திரனின் குரல் அருமையாக உணர்வை வெளிப்படுத்துகிறது.
கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை நீங்களில்லை என்றுஎங்கள் வாய்கள் சொல்லவில்லை
(பாடல் வரிகளை முற்றுமுழுதாகச் சரியாக எழுதினேனா என்று தெரியவில்லை.)
காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று புரிந்திடாத மொழியினோடு பாடுது ஒரு பாட்டு வாசல் வந்து ஆடுகின்ற பிள்ளை நிழல்பார்த்து வாடுமந்த தாய்களின்றி கேட்க வந்த கூற்று வாய்களின்றி பாடுதிங்கே காலநதிக்காற்று வராற்றில் மூன்று பக்கம் விரிந்ததம்மா நேற்று
தேசமெங்கும் தேடுகின்ற விழிகளிங்கு ஆயிரம் வாசமலர் கையெடுத்து நின்றகாலை ஆயிரம் வீதியெங்கும் சுடரெத்த சாகும்பொழுதிலே -விழி நீரெடுத்து விளக்கெரித்தோம் எங்கள் மனதிலே கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை நீங்களில்லை என்றுஎங்கள் வாய்கள் சொல்லவில்லை
பந்தலிட்ட நினைவுக் கோயில் படங்கள் தேடுதும்மை விந்தையென்று உலகம் இன்று சொல்லி நிற்குதும்மை சுவரில்லாடும் முகங்கள் இன்று தேடுதெங்கள் கண்கள் சுவரில்லாமல் வரைந்து விட்ட ஓவியங்கள் நீங்கள் வார்த்தையின்றி பாடுமோசை காற்றில் கேட்கவில்லை காத்திருந்த விழியில் உங்கள் முகங்கள் மாறவில்லை
மழை குளித்த மரங்கள் மீது தளிர் திறக்குது -எங்கள் மல்லிகையில் புதியதொரு முகை பிடிக்குது வெற்றி வாகை தோன்றி காலை உலகை தொழுகுது -இந்த செய்தியெல்லாம் நீங்களென்று காலம் சொல்லுது கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை நீங்களில்லை என்றுஎங்கள் வாய்கள் சொல்லவில்லை
காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று புரிந்திடாத மொழியினோடு பாடுது ஒரு பாட்டு ஊர்களின்றி பேர்களின்றி போன செய்தி கேட்டு வாசலெங்கும் வீசுமென்று தேடுதிங்கு காற்று
இன்று தாண்டிக்குளச் சண்டையின் வெற்றிநாள். கண்டிவீதியைக் கைப்பற்றவென 'வெற்றி நிச்சயம்" (ஜெயசிக்குறு) என்று பெயரிட்டு எதிரி படைநடவடிக்கை தொடங்கி சில இடங்களையும் கைப்பற்றியிருந்தான். இந்நிலையில் ஒருமாத காலத்துள் எதிரிமீது பெரியதொரு வலிந்த தாக்குதலைப் புலிகள் நடத்தினர். எதிரியின் முக்கிய தளமான தாண்டிக்குளம் மீது நடத்தப்பட்ட அத்தாக்குதல் ஜெயசிக்குறு படைநடவடிக்கை மீது நடத்தப்பட்ட முதலாவது வலிந்த தாக்குதல்.
இவ்வெற்றியைக் குறித்த பாடல்தான் "யாரென்று நினைத்தாய் எம்மை" பாடல் எழுதியவர்: அண்மையில் மறைந்த கவிஞர் நாவண்ணன். பாடியவர்கள்: திருமலைச்சந்திரன், சீலன். _________________________________
இனியும் இனியும் வெடிகள் அதிரும் எதிரி வாழும் நாட்டிலே -எம் இனத்தை எவரும் அடக்க நினைத்தால் வெடிக்கும் அவரின் வீட்டிலே
*** ஊரிலிருந்து வேரையறுத்து உறவைக் கலைத்த முகத்திலே காறியுமிழ்ந்தேறி மிதித்தார் அவர்கள் துறை முகத்திலே கரிய புலிகள் இனியும் புதிய சரிதம் எழுதும் பொழுதிலே கடலின் புலிகள் படகில் எழுந்தார் பகைவன் சாவின் விளிம்பிலே
இனியும் இனியும் வெடிகள் அதிரும் எதிரி வாழும் நாட்டிலே -எம் இனத்தை எவரும் அடக்க நினைத்தால் வெடிக்கும் அவரின் வீட்டிலே
*** தலைவன் காட்டும் வழியில் நடந்து கடலின் வேங்கை விரைந்திடும் தமிழர் தேசம் விடியும் வரையும் கரிய புலிகள் உருகிடும் உலகம் முழுதும் புருவம் உயர கடலின் புலிகள் நடந்திடும் தமிழன் நிலத்தை அழிக்கும் பகைவன் உயிரை புலிகள் குடித்திடும்
இனியும் இனியும் வெடிகள் அதிரும் எதிரி வாழும் நாட்டிலே -எம் இனத்தை எவரும் அடக்க நினைத்தால் வெடிக்கும் அவரின் வீட்டிலே
*** கூட்டைக் கலைத்த கொடியர் இருக்கும் குகையில் வீழ்ந்த ஒரு அடி குளறக் குளறக் கடலின் புலிகள் கொழும்பில் இடிக்கும் பலஇடி கடலின் புலிகள் எழுவார் எனிலோ திசைகள் முழுதும் காலிலே இனிமேல் அதிரும் வெடிகள் முழுதும் பகைவன் ஊரின் தோளிலே
இனியும் இனியும் வெடிகள் அதிரும் எதிரி வாழும் நாட்டிலே -எம் இனத்தை எவரும் அடக்க நினைத்தால் வெடிக்கும் அவரின் வீட்டிலே