குனியாது கடல்வேங்கை.
இம்முறை கடற்புலிகள் பற்றிய பாடலொன்று. பாடியவர்கள்: திருமலைச்சந்திரன், மேஜர் சிட்டு. இசை: முரளி பாடல் வரிகள்: புதுவை இரத்தினதுரை. இது கொழும்புத் துறைமுகத்தில் 1996 ஆம் ஆண்டு கடற்புலிகள் நடத்திய தாக்குதலின் நினைவாக வெளியிடப்பட்ட பாடல். கடலின் காற்றே கடலின் காற்றே எரியும் புலியைத் தழுவிவிடு உயிரைக் கரைக்கும் புலிகள் மூச்சை கரையை நோக்கி உலவவிடு குனியாது கடல்வேங்கை ஒருநாளும் -வைத்த குறியேதும் தறவாது இடிவீழும் பணியாது தமிழ் ஈழம் போராடும் -எங்கள் பகைமீது இனிமேலும் இடிவீழும் இனியும் இனியும் வெடிகள் அதிரும் எதிரி வாழும் நாட்டிலே -எம் இனத்தை எவரும் அடக்க நினைத்தால் வெடிக்கும் அவரின் வீட்டிலே *** ஊரிலிருந்து வேரையறுத்து உறவைக் கலைத்த முகத்திலே காறியுமிழ்ந்தேறி மிதித்தார் அவர்கள் துறை முகத்திலே கரிய புலிகள் இனியும் புதிய சரிதம் எழுதும் பொழுதிலே கடலின் புலிகள் படகில் எழுந்தார் பகைவன் சாவின் விளிம்பிலே இனியும் இனியும் வெடிகள் அதிரும் எதிரி வாழும் நாட்டிலே -எம் இனத்தை எவரும் அடக்க நினைத்தால் வெடிக்கும் அவரின் வீட்டிலே *** தலைவன் காட்டும் வழியில் நடந்து கடலின் வேங்கை விரைந்திடும் தமிழர் தேசம் விடியும் வரையும் கரிய புலிகள் உருகிடும் உலகம் முழுதும் புருவம் உயர கடலின் புலிகள் நடந்திடும் தமிழன் நிலத்தை அழிக்கும் பகைவன் உயிரை புலிகள் குடித்திடும் இனியும் இனியும் வெடிகள் அதிரும் எதிரி வாழும் நாட்டிலே -எம் இனத்தை எவரும் அடக்க நினைத்தால் வெடிக்கும் அவரின் வீட்டிலே *** கூட்டைக் கலைத்த கொடியர் இருக்கும் குகையில் வீழ்ந்த ஒரு அடி குளறக் குளறக் கடலின் புலிகள் கொழும்பில் இடிக்கும் பலஇடி கடலின் புலிகள் எழுவார் எனிலோ திசைகள் முழுதும் காலிலே இனிமேல் அதிரும் வெடிகள் முழுதும் பகைவன் ஊரின் தோளிலே இனியும் இனியும் வெடிகள் அதிரும் எதிரி வாழும் நாட்டிலே -எம் இனத்தை எவரும் அடக்க நினைத்தால் வெடிக்கும் அவரின் வீட்டிலே Labels: கடற்புலிகள், சிட்டு, திருமலைச் சந்திரன், புதுவை இரத்தினதுரை, முரளி |
Comments on "குனியாது கடல்வேங்கை."
//இனியும் இனியும் வெடிகள் அதிரும்
எதிரி வாழும் நாட்டிலே -எம்
இனத்தை எவரும் அடக்க நினைத்தால்
வெடிக்கும் அவரின் வீட்டிலே
//
வருகைக்கு நன்றி பெயரில்லாதவரே,