சின்ன சின்னக் கூடு கட்டி
யாழ்ப்பாணத்திலிருந்து லட்சக்கணக்கில் மக்கள் வெளியேறிய காலப்பகுதியில் வெளிவந்த பாடலிது. அந்த நேரத்தில் இப்பாடலைக் கேட்கும்போது ஏற்பட்ட உணர்வைச் சொல்ல முடியாது. வெளிவந்த மக்களின் வேதனையையும், ஊர் திரும்பும் வேட்கையையும் சொல்லும் பாடலிது. போருக்கான அறைகூவலாகவும் உள்ளது. குரலுக்குச் சொந்தக்காரர்கள்: மேஜர் சிட்டு, சுகுமார். சின்ன சின்ன கூடுகட்டி நாமிருந்த ஊர்பிரிந்தோம் தென்னிலங்கைப் பேய்களினால் நாமிருந்த கூடிழந்தோம் கண்களிலே நீர்வழிய காலெடுத்து நாம் நடந்தோம் செம்மணிக்கு வந்தபின்னும் செய்வதறி யாதிருந்தோம் விடுதலைக்கு நாம் கொடுத்த விலையிது -எங்கள் தலைமுறைக்கு நாம் கொடுத்த உயிரிது வந்தவழி நாம்நடந்து வாசல் புகவேண்டும் - எங்கள் வயல்வெளிகள் மீண்டும் இனி அழகொளிர வேண்டும் எந்தையர்கள் வாழ்ந்திருந்த ஊர் திரும்ப வேண்டும் -தமிழ் ஈழமதைக் காணுகின்ற நாளும் வரவேண்டும் எழடா எழடா இனியும் குனிவாய் எனிலோ அழிவாய் தமிழா வருவாய் வருவாய் புலியாய் வருவாய் எனிலோ மகிழ்வாய் தமிழா எமதூர் முழுதும் அழிவான் பகைவன் படையாய்த் தமிழா எழடா பிரபாகரன் படையாய் நிமிர்வாய் வருவாய் தமிழா உடனே வெய்யில் மழை பனியிலும் வீதியிலே நாமிருந்தோம் வீடிழந்து கூடிழந்து நாதியற்று நாம் திரிந்தோம் பொய்யுரைக்கும் பேய்களுக்கு நாம் பயந்து வந்தோம் -எங்கள் பெருந்தலைவன் பாதையிலே போகுமிடம் கண்டோம் எழடா எழடா இனியும் குனிவாய் எனிலோ அழிவாய் தமிழா வருவாய் வருவாய் புலியாய் வருவாய் எனிலோ மகிழ்வாய் தமிழா எமதூர் முழுதும் அழிவான் பகைவன் படையாய்த் தமிழா எழடா பிரபாகரன் படையாய் நிமிர்வாய் வருவாய் தமிழா உடனே Labels: சிட்டு, சுகுமார், மக்கள் துயர் |
Comments on "சின்ன சின்னக் கூடு கட்டி"
நன்றி
எழுதிக்கொள்வது: thaamarai
இங்க கொத்திக் குதறுராங்க! என்ன ? முண்டமே !உனக்கு பாட்டாடா, கேட்குது!
எல்லோரயும் வெளிய அனுப்பி போட்டியோ!
தாமரை
15.54 15.5.2006
சந்திரவதனா, வருகைக்கு நன்றி.
தாமரை,
வாங்கோ, வாங்கோ.
"இங்க" எண்டு சொல்லுறதுக்குள்ளால ஏதோ அங்க வெட்டிக்குதறுற இடத்திலயிருக்கிற மாதிரி ஒரு வண்டில் விடுறியள் பாருங்கோ.
உந்த வெட்டுற கொத்திற விசயத்தில நாங்கள் எந்தப் பக்கமெண்டது உங்களுக்கும் தெரியும். உதுக்கு என்ன செய்ய வேணுமெண்டு எங்களுக்கும் தெரியும். நீங்கள் வழமை போல உங்கட வேலையப் பாத்துக்கொண்டிருங்கோ.
நான் ஆரை அடைச்சு வைச்சிருந்தனான் வெளிய அனுப்பிறதுக்கு?
என்னைத் திட்டுறதுக்கெண்டாலும் வெட்டுப்படுற சனத்தில அபிமானமுள்ள ஆள் மாதிரி ஒரு வசனம் எழுதியிருக்கிறியள் பாருங்கோ. அங்கதான் இந்தப் பதிவின்ர வெற்றி இருக்கு.
Great job.
Thanks.