• Anonymous commented:
    super songs Thanks

    வன்னியன் commented:
    சந்திரவதனா, வெற்றி,வருகைக்கு நன்றி.

    வெற்றி commented:
    வன்னி,பாடலுக்கும், பாடல் பற்றிய தகவல்களுக்கும் மிக்க நன்றி.

    Chandravathanaa commented:
    பாடலுக்கு நன்றி

    Anonymous commented:
    vanni...please post currnet update of war front..i think it is not as to your liking...

    வன்னியன் commented:
    வெற்றி,வருகைக்கு நன்றி.பொன்.சுந்தரலிங்கம் என்றுதான் நானும் நினைக்கிறேன். நூறு வீதமும் உறு...

    வெற்றி commented:
    வன்னி,மிகவும் அருமையான பாடல். இதுவரை கேட்டிருக்கவில்லை. பதிவிலிட்டமைக்கு மிக்க நன்றி.சங்கீ...

புகைப்படத் தளங்கள்

Get your own calendar

Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4

Powered by Blogger

Outsourcing, IT outsourcing, and Offshore Outsource Company.
Outsourcing

________________

Click Here To Earn Money

Thursday, October 05, 2006

தீயினில் எரியாத தீபங்களே

இன்று (05.10.2006) குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைள் நஞ்சருந்தி வீரச்சாவடைந்த சம்பவத்தின் பத்தொன்பதாம் நினைவுநாள்.

தமிழீழக் கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடற்படையால் கைது செய்ப்பட்ட இவர்கள் சிறிலங்கா அரசதரப்பிடம் கையளிக்கப்பட இருந்த நிலையில் நஞ்சருந்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
இவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட பாடல்.

பாடல் ஒலிப்பேழை: களத்தில் கேட்கும் கானங்கள்
பாடியவர்: ரி.எல். மகாராஜன்
இசை: தேவேந்திரன்.
பாடல்: புதுவை இரத்தினதுரை.
____________________






காற்றும் ஒருகணம் வீச மறந்தது
கடலும் ஒருநொடி அமைதியாய் கிடந்தது
தேற்றுவார் இன்றியெம் தேசம் அழுதது
தீருவில் வெளியிலும் தேகங்கள் எரிந்தது

தீயினில் எரியாத தீபங்களே -எம்
தேசத்தில் நிலையான வேதங்களே
மண்ணினில் விதையான முத்துக்களே -நாம்
மாதவம் செய்து பெற்ற சொத்துக்களே

நெஞ்சினில் நெருப்பேந்தி வாருங்கள் -புலி
நிச்சயம் வெல்லுமென்று கூறுங்கள்


கடலினில் கடல்புறா பயணங்கள் போனது
சிறிலங்கா இராணுவம் பொறிவைக்க லானது
குமரப்பா புலேந்திரன் உடன் பத்து வேங்கைகள்
கொள்கையின்படி நஞ்சை குடித்தபின் சாய்ந்தனர்
இளமையில் சருகாகிக் போனவரே -எம்
இதயத்தில் உருவான கோவில்களே

அப்துல்லா ரகு நளன் ஆனந்தகுமார் மிரேஸ்
அன்பழகன் றெஜினோல்ட் பழனி கரனுடன் தவக்குமார்
ஆகிய வேங்கைள் அனலிடை போயினர்
காவிய நாயகர் களப்பலி ஆகினர்
மக்களுக்காக கடல் சென்றீரே -மண
மாலைகள் வாட முன்னர் போனீரே

எங்களின் கடலிலே எவனெம்மை பிடிப்பது
எங்களின் படகினை எவனிங்கு தடுப்பது
இந்திய அரசது ஏன்துணை போனது
இடியுடன் பெருமழை ஏன் உருவானது
கண்களில் நீர் சுமந்து நிற்கின்றோம் -நீர்
காட்டிய பாதையிலே செல்கின்றோம்




தரவிறக்க

_____________________________________________

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Comments on "தீயினில் எரியாத தீபங்களே"

 

Anonymous Anonymous சொன்னது... (10/05/2006 04:49:00 AM) : 

பாடலுக்கு நன்றி.

 

Blogger வன்னியன் சொன்னது... (10/05/2006 06:00:00 AM) : 

வருகைக்கு நன்றி அனானி.

 

Blogger Chandravathanaa சொன்னது... (10/05/2006 06:35:00 AM) : 

மிக உணர்வான பாடல்.
இதே வரிகளுடன் தொடங்கும் இன்னொரு பாடல்
http://thayagageetham.blogspot.com/2005/01/blog-post.html

 

Blogger மலைநாடான் சொன்னது... (10/05/2006 02:27:00 PM) : 

வன்னியன்!

நெஞசம் மறக்குமா? நம் நெஞ்சம் மறக்குமா?

இதற்கு முன்னும் நேற்றிரவு, ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேனே. வரவில்லையா?

 

Blogger வன்னியன் சொன்னது... (10/05/2006 10:24:00 PM) : 

சந்திரவதனா,
பாடல் இணைப்புக்கு நன்றி.

மலைநாடான்,
சில காரணங்களால் அப்பின்னூட்டத்தை இப்பதிவில் வெளியிட முடியாது.
வருகைக்கு நன்றி.

 

post a comment

__________________

Google
 
Web eelapadalhal.blogspot.com

Padi Pathivu

Your Ad Here

Pooraayam
Your Ad Here

_______________