Get your own calendar

Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4

Powered by Blogger

Outsourcing, IT outsourcing, and Offshore Outsource Company.
Outsourcing

________________

Click Here To Earn Money

Monday, April 23, 2007

ஆனந்தப் பூங்காற்று -ஆனையிறவுப் பாடல்

ஆனையிறவு என்பது ஈழத்தமிழர் மனங்களில் நீங்கா இடம்பெற்ற ஓரிடம். சொல்லொன்னாத் துயரங்களை எமக்குத் தந்த இடமது. ஆனால் அது எதிரியின் கையில் இருக்கும்வரைதான் தமிழர்க்குத் துன்பம். 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் தமிழர்சேனையிடம் அப்படைத்தளம் முழுமையாக வீழ்ந்தபோது உலகெங்கும் வாழும் ஈழத்தமிழினம் ஆனந்தக் கூத்தாடியது.
ஈழத்தமிழரின் போராட்ட வரலாற்றில் அதிக துன்பங்களைத் தந்ததும், எமது கைகளில் வீழ்ந்தபோது அதிக மகிழ்ச்சி தந்ததும் இப்படைத்தளம்தான்.

ஆனையிறவுப் படைத்தள வெற்றியின் களிப்பில் பாடப்பட்ட பாடல் இது.


ஆனந்தப்பூங்காற்று....


ஆனந்தப் பூங்காற்று காதினிலே வந்து
ஆலோலம் ஆலோலம் பாடுதம்மா இன்று
ஆனையிறவிலே ஏறிடும்போதிலே
ஆகா எம் கைகளில் ஆடுதம்மா
உப்புக்கடலே உப்பளக்காற்றே
உம்மைத் தழுவுகின்றோம்
ஊருக்குப் போகின்ற வீதியில் ஏறிட
ஏனோ அழுகின்றோம்

வீடிழந்து ஊரிழந்து ஓடிவந்தவர் -நாங்கள்
வீதியெங்கும் நாதியற்று வெந்து நொந்தவர்
போருக்கென்றும் ஆதரவாய் நாமிருந்தவர் -எல்லை
படையாகிப் புலியோடு நின்றவர்
எம் தலைவா எங்களுடன் நின்று எடுத்தாய் -மீண்டும்
எங்கள் ஊரில் சென்றுவாழ தெம்பு கொடுத்தாய்
ஆவிஉடல் யாவுமுமக் காகக்கொடுத்தோம் -தம்பி
அச்சமின்றி உம்மருகில் என்றுமிருப்போம்

வாழ்வளித்த வன்னிமண்ணே உன்னைக் கொஞ்சவா -நாங்கள்
பட்டகடன் உந்தனுக்கு கொஞ்ச நஞ்சமா
காலெடுத்து வந்தபகை வென்றவீரரே - உங்கள்
கையெடுத்து முத்தமிட கையைத் தாருமே -
மீதமுள்ள ஊர்களையும் நாளை பிடிப்போம் -எங்கள்
ஊரிலேறி வந்தபகை யாவும் துடைப்போம்
நாளை தமிழ் ஈழமென நம்பியிருப்போம் -அந்த
நாடு வரும் நேரத்திலே நின்று சிரிப்போம்

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Comments on "ஆனந்தப் பூங்காற்று -ஆனையிறவுப் பாடல்"

 

post a comment

__________________

Google
 
Web eelapadalhal.blogspot.com

Padi Pathivu

Your Ad Here

Pooraayam
Your Ad Here

_______________