• Anonymous commented:
    super songs Thanks

    வன்னியன் commented:
    சந்திரவதனா, வெற்றி,வருகைக்கு நன்றி.

    வெற்றி commented:
    வன்னி,பாடலுக்கும், பாடல் பற்றிய தகவல்களுக்கும் மிக்க நன்றி.

    Chandravathanaa commented:
    பாடலுக்கு நன்றி

    Anonymous commented:
    vanni...please post currnet update of war front..i think it is not as to your liking...

    வன்னியன் commented:
    வெற்றி,வருகைக்கு நன்றி.பொன்.சுந்தரலிங்கம் என்றுதான் நானும் நினைக்கிறேன். நூறு வீதமும் உறு...

    வெற்றி commented:
    வன்னி,மிகவும் அருமையான பாடல். இதுவரை கேட்டிருக்கவில்லை. பதிவிலிட்டமைக்கு மிக்க நன்றி.சங்கீ...

புகைப்படத் தளங்கள்

Get your own calendar

Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4

Powered by Blogger

Outsourcing, IT outsourcing, and Offshore Outsource Company.
Outsourcing

________________

Click Here To Earn Money

Thursday, November 16, 2006

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்

பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான "தவளைப் பாய்ச்சல்" நவடிக்கையில் வீரச்சாவடைந்தவர்களை நினைவுகூர்ந்து பாடப்பட்ட பாடலிது.
பாடகர் மேஜர் சிட்டுவின் இனிமையான குரலில் பாடல் அருமையாகப் பாடப்பட்டுள்ளது.
'சோகப் பாடல்களுக்கென்றால் சிட்டு தான்' என்ற கருத்து மக்களிடையே ஆழமாக வேருன்ற இப்படியான பாடல்கள் காரணமாக அமைந்துவிட்டன.






மேற்படி செயலிகள் தொழிற்படாவிட்டால் நேரடியாக கீழுள்ள இணைப்பை அழுத்திக் கேளுங்கள்.

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்

_________________________________________

மழைமேகம் துளியாகிப் பொழிகின்ற காலம்
பகைவீடு துயில்கின்ற விடிசாம நேரம்
புயலாகி தமிழீழப் புலியாகிச் சென்றீர்
பூநகரில் நிலையான பகையாவும் வென்றீர்

வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்
விடுதலைக்கு முடிதரித்து விட்டுறங்குகின்றீர்
பெற்றளித்த ஆயுதங்கள் போல் முழங்குகின்றீர்
பூநகரி நாயகராய் நீர்விளங்குகின்றீர்

வந்தபடை தளத்தினிலே தீயை மூட்டினீர் -பகை
வாசலிலே நீர்புகுந்து பேயை ஓட்டினீர்
விந்தையிது என்றுலகம் வியந்துரைத்தது -உங்கள்
வீரமதை கண்டுபகை பயந்தொளித்தது

நாகதேவன்துறையினிலே காற்றாகினீர் -அந்த
ஞானிமடத் தளத்தினிற்கு கூற்றாகினீர்
வேவுப்படை வீரரென நீங்கள் புகுந்தீர் -பெற்ற
வெற்றிகளின் வேர்களிலே நீங்கள் விழுந்தீர்

நெஞ்சினிலே உங்களுக்கோர் கோயிலமைத்தோம் -கண்ணில்
நீர்வழிய நின்றுமக்கு மாலைதொடுத்தோம்
பஞ்சு நெருப்பாகிவரும் பகையை முடிப்போம் -பிர
பாகரனின் காலத்திலே ஈழம் எடுப்போம்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Comments on "வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்"

 

Blogger Chandravathanaa சொன்னது... (11/16/2006 03:25:00 AM) : 

என் மனதை உருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
பாடலைக் கேட்காமல் வரிகளை வாசிக்கவே உடல் முழுவதும்
ஏதோ பரவுவது போன்ற உணர்வு.

பாடலைக் கேட்கும் போதெல்லாம், கண்கள் சொரிவதை என்னால் தவிர்க்க முடிவதில்லை.
என் உணர்வுகளின் அசைவுக்கு>
சிட்டுவின் அந்தக் குரலும் ஒரு காரணம்.
என் தம்பியின் வீரமரணம் பலமான காரணம் என்று எண்ணுகிறேன்.

 

Blogger வன்னியன் சொன்னது... (11/16/2006 08:17:00 PM) : 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சந்திரவதனா.
உங்கள் தம்பியும் (மயூரன் தானே?) இச்சமரில்தான் வீரச்சாவென்பது உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்த பின்தான் ஞாபகம் வந்தது.

 

Blogger Chandravathanaa சொன்னது... (11/25/2006 12:40:00 PM) : 

ஓம்,
மயூரன்தான்

 

post a comment

__________________

Google
 
Web eelapadalhal.blogspot.com

Padi Pathivu

Your Ad Here

Pooraayam
Your Ad Here

_______________