வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்
பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான "தவளைப் பாய்ச்சல்" நவடிக்கையில் வீரச்சாவடைந்தவர்களை நினைவுகூர்ந்து பாடப்பட்ட பாடலிது. பாடகர் மேஜர் சிட்டுவின் இனிமையான குரலில் பாடல் அருமையாகப் பாடப்பட்டுள்ளது. 'சோகப் பாடல்களுக்கென்றால் சிட்டு தான்' என்ற கருத்து மக்களிடையே ஆழமாக வேருன்ற இப்படியான பாடல்கள் காரணமாக அமைந்துவிட்டன. |
Comments on "வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்"
என் மனதை உருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
பாடலைக் கேட்காமல் வரிகளை வாசிக்கவே உடல் முழுவதும்
ஏதோ பரவுவது போன்ற உணர்வு.
பாடலைக் கேட்கும் போதெல்லாம், கண்கள் சொரிவதை என்னால் தவிர்க்க முடிவதில்லை.
என் உணர்வுகளின் அசைவுக்கு>
சிட்டுவின் அந்தக் குரலும் ஒரு காரணம்.
என் தம்பியின் வீரமரணம் பலமான காரணம் என்று எண்ணுகிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சந்திரவதனா.
உங்கள் தம்பியும் (மயூரன் தானே?) இச்சமரில்தான் வீரச்சாவென்பது உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்த பின்தான் ஞாபகம் வந்தது.
ஓம்,
மயூரன்தான்