சி்ன்னஞ்சிறு ஊரு - ஆனையிறவுப் பாடல்
ஆனையிறவு என்பது ஈழத்தமிழர் மனங்களில் நீங்கா இடம்பெற்ற ஓரிடம். சொல்லொன்னாத் துயரங்களை எமக்குத் தந்த இடமது. ஆனால் அது எதிரியின் கையில் இருக்கும்வரைதான் தமிழர்க்குத் துன்பம். 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் தமிழர்சேனையிடம் அப்படைத்தளம் முழுமையாக வீழ்ந்தபோது உலகெங்கும் வாழும் ஈழத்தமிழினம் ஆனந்தக் கூத்தாடியது. ஈழத்தமிழரின் போராட்ட வரலாற்றில் அதிக துன்பங்களைத் தந்ததும், எமது கைகளில் வீழ்ந்தபோது அதிக மகிழ்ச்சி தந்ததும் இப்படைத்தளம்தான். ஆனையிறவுப் படைத்தள வெற்றிக்கு விதையான மாவீரரை நினைத்துப் பாடப்பட்ட பாடல் இது.
சி்ன்னஞ்சிறு ஊரு கண்ணழுத வாறு தேடியுமக்காக காத்திருக்கும் தென்னைமரத் தோப்பு உம்மையெதிர் பார்த்து கண்ணிரண்டும் நோக பூத்திருக்கும் -எங்கள் சின்னஞ்சிறு ஊரு கண்ணழுத வாறு தேடியுமக்காக காத்திருக்கும் பகைவென்று பகைவென்று விடைகொண்டவர் -ஆனை யிறவெங்கும் புலிவீரர் கதைசொன்னவர் தடைவென்று மாவீரர் எனவானவர் -நாளை தமிழீழம் வருமென்று துயில்கின்றவர் உப்புத் தரவையெங்கும் உங்களின் குருதி -இந்த உப்பளக் காற்றினிலே உங்கள் சுருதி எப்பொழுதும் கேட்கும் உங்கள் குரலே -நீங்கள் எழுந்தே வரவேண்டும் எங்களின் அருகே கண்களில் நீர்வழிய உமைநினைத்தோம் -உங்கள் கல்லறை தனில்வந்து எமைநனைத்தோம் விண்ணிருந்து இறங்கி கண்ணைத் திறப்பீர் -நீங்கள் விழுந்த இடம்தன்னில் புன்னகை செய்வீர் |
Comments on "சி்ன்னஞ்சிறு ஊரு - ஆனையிறவுப் பாடல்"