யாரென்று நினைத்தாய் எம்மை?
இன்று தாண்டிக்குளச் சண்டையின் வெற்றிநாள். கண்டிவீதியைக் கைப்பற்றவென 'வெற்றி நிச்சயம்" (ஜெயசிக்குறு) என்று பெயரிட்டு எதிரி படைநடவடிக்கை தொடங்கி சில இடங்களையும் கைப்பற்றியிருந்தான். இந்நிலையில் ஒருமாத காலத்துள் எதிரிமீது பெரியதொரு வலிந்த தாக்குதலைப் புலிகள் நடத்தினர். எதிரியின் முக்கிய தளமான தாண்டிக்குளம் மீது நடத்தப்பட்ட அத்தாக்குதல் ஜெயசிக்குறு படைநடவடிக்கை மீது நடத்தப்பட்ட முதலாவது வலிந்த தாக்குதல். இதுபற்றி சற்று விரிவான பதிவு இங்கே. இவ்வெற்றியைக் குறித்த பாடல்தான் "யாரென்று நினைத்தாய் எம்மை" பாடல் எழுதியவர்: கடந்தவருடம் மறைந்த 'மாமனிதர்' கவிஞர் நாவண்ணன். பாடியவர்கள்: திருமலைச்சந்திரன், சீலன். _________________________________ யாரென்று நினைத்தாய் எம்மை ஏன்வந்து அழித்தாய் மண்ணை போரென்றா எழுந்தாய் வந்து புலிகாலில் விழுந்தாய் பணிந்து கண்டிவீதி நீபிடித்து கைகுலுக்கவோ -முன்னர் ஆண்டிருந்த நிலமுழுதும் நாமிழக்கவோ (2) தாண்டிக்குளம் மேலே மேகம் இடியிடித்தது -எல்லை தாண்டிவந்து நின்றவர்க்கு உயிர் துடித்தது பார்த்தாயா சிங்களத் தம்பி-இங்கு வருவாயா அனுருத்த நம்பி கொண்டுவந்து ஆயுதங்கள் நீகுவிப்பதோ -நாளும் குண்டுகளால் எங்கள்தேசம் தீக்குளிப்பதோ (2) கோபம் கொண்ட வேங்கைள் களங்களாடினர் -தாண்டிக் குளத்தில் நின்ற பகைவர்கள் பிணங்களாயினர் பார்த்தாயா சிங்களத் தம்பி-இங்கு வருவாயா அனுருத்த நம்பி |
Comments on "யாரென்று நினைத்தாய் எம்மை?"
vanni...please post currnet update of war front..i think it is not as to your liking...