Get your own calendar

Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4

Powered by Blogger

Outsourcing, IT outsourcing, and Offshore Outsource Company.
Outsourcing

________________

Click Here To Earn Money

Saturday, June 03, 2006

மாங்கிளியும் மரங்கொத்தியும்

இது புலத்தில் வாழும் தமிழர் பலரின் ஏக்கத்தைச் சொல்லும் பாடல்.
வெளிவந்த நேரம் மட்டுமன்றி எப்போதுமே இப்பாடலுக்கென்று தனியே மரியாதையுண்டு.

தேனிசை செல்லப்பாவின் குரலில் (காசி ஆனந்தன் அவர்களின் பெரும்பாலான பாடல்களுக்கு இவர்தான் குரல் கொடுத்துள்ளார்) அருமையாக வந்துள்ளது பாடல். மிக இலகுவான மெட்டு.

____________________________________
ஒரு செயலி செயற்படாவிட்டால் மற்றதை முயலவும்.





மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை
நாங்க மட்டும் உலகத்தில நாடு திரும்ப முடியல.

சிங்களவன் படை வானில்
நெருப்பை அள்ளிச் சொரியுது
எங்களுயிர் தமிழீழம்
சுடுகாடாய் எரியுது
தாய் கதற பிள்ளைகளின்
நெஞ்சுகளைக் கிழிக்கிறான்
காயாகும் முன்னே இளம்
பிஞ்சுகளை அழிக்கிறான்.

பெத்தவங்க ஊரில
ஏங்குறாங்க பாசத்தில
எத்தனை நாள் காத்திருப்போம்
அடுத்தவன் தேசத்தில
உண்ணவும் முடியுதில்லை
உறங்கவும் முடியுதில்லை
எண்ணவும் முடியுதில்லை
இன்னுந்தான் விடியுதில்லை

கிட்டிப் புள்ளு அடித்து நாங்கள்
விளையாடும் தெருவில
கட்டிவச்சுச் சுடுகிறானாம்
யார் மனசும் உருகல
ஊர்க்கடிதம் படிக்கையில
விம்மி நெஞ்சு வெடிக்குது
போர்ப்புலிகள் பக்கத்தில
போக மனம் துடிக்குது

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Comments on "மாங்கிளியும் மரங்கொத்தியும்"

 

சொன்னது... (6/07/2006 05:44:00 AM) : 

நல்ல உருக்கமான பாடல்.
புலம்பெயர்ந்தவர்களின் ஏக்கத்தை அழகாகச் சொல்லும் பாடல்.
தேனிசை செல்லப்பாவின் குரலில்தான் காசி ஆனந்தன் அவர்களின் பாடல்களுக்குத் தனிமரியாதை.

"இந்த ஆடுகள் ஒருநாள் பட்டிதிரும்பும்" என்ற பாடலும் இதேபோல் புலம்பெயர்ந்தவர்களின் உணர்வுகளைச் சொல்லும் பாடல்.
அந்த பாட்டு இருந்தால் அதையும் தாருங்கள்.

 

post a comment

__________________

Google
 
Web eelapadalhal.blogspot.com

Padi Pathivu

Your Ad Here

Pooraayam
Your Ad Here

_______________