எந்தையர் ஆண்டதின் நாடாகும்
புகழ் பெற்ற ஈழத்துப் பாடகர் சாந்தன் பாடிய பாடல். இவ்வகையான பாடல்களுக்கு சாந்தனின் குரல் அருமையாக ஒத்துவருகிறது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் வந்த பாடல்கள் வரிசையில் முக்கியமான பாடல். பாடல் வரிகள் யாரென்று சரியாகத தெரியவில்லை. வரிகளை வைத்துப் பார்க்கும்போது பண்டிகர் பரந்தாமன் அல்லது பஞ்சாட்சரமாக இருக்கலாம். எளிமையான இசை அருமையாக உள்ளது. இப்போது தான் பார்த்தேன். பாடல் இணைப்பு வேலை செய்யவில்லை. சரிப்படுத்துவரை கீழ்க்காணும் இணைப்பிற் சொடுக்கிப் பாடலைக் கேளுங்கள். இணைப்பு ஒன்று இணைப்பு இரண்டு இசைத்தட்டு: புதியதோர் புறம். ___________________________________ |
Comments on "எந்தையர் ஆண்டதின் நாடாகும்"
இப்போது செயலிக்கான இணைப்புக்கள் சரியாக வேலை செய்கின்றன.
எல்லா இணைப்பும் நன்றாக வேலை செய்கின்றன.
நீங்கள் சொன்னது போல சாந்தனுக்கு இம்மாதிரியான பாடல்கள் நன்றாகப் பொருந்தும்.
யாழ்ப்பாணத்தில் "அணலில் கருவாகி புனலில் உருவான கந்தனூர்" என்றபாடலை சாந்தன் மேடைகளில் பாடும்போது கேட்கும் சுகமே தனி.
இவற்றைவிட
"அதியாய் அநாதியாய்"
"பண்பாட்டுக்கிசைவாகப் பண்பாடு"
போன்ற பாடல்கள் இவ்வகைக்குள் அடங்குமென்று நினைக்கிறேன்.
நல்ல பணி தொடரவும்.
பெயரில்லாதவருக்கு நன்றி.
ஆம். யாழ்ப்பாணத்தில் கணலிற் கருவாகி பாடலை சாந்தனிடமிருந்து கேட்க அந்த மாதிரியிருக்கும்.
நீங்கள் கேட்ட மற்ற இருபாடல்களும் என்னிடமிருக்கின்றன. விரைவில் தருவேன்.