Get your own calendar

Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4

Powered by Blogger

Outsourcing, IT outsourcing, and Offshore Outsource Company.
Outsourcing

________________

Click Here To Earn Money

Monday, June 05, 2006

நீலக்கடலேறி வந்து மேனிதொடும் காற்று

தொன்னூறுகளின் தொடக்க காலத்தில் வந்த பாடல்கள் மிக அருமையானவை. இந்தமண் எங்களின் சொந்த மண், நெய்தல் போன்ற இசைநாடாக்கள் வெளிவந்த காலமது. அப்போது வெளிவந்த பாடல்களில் ஒன்றுதான் இப்பாடல்.

மாவீரன் மேஜர் சிட்டுவின் குரலில் அருமையான பாடல்.
கடலில் எம்மவர் பட்ட துன்பங்களும், கடலில் தமிழர்படை பெற்ற வெற்றிக் களிப்பும் இப்பாடலில் வருகிறது.

எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்களிவை.





நீலக்கடலேறி வந்து மேனிதொடும் காற்று -வான்
மீதுநிலா பால்சொரியும் நேரம் வலையேற்று
ஈழக்கடல்மீதில் எங்கும் இன்பநிலை ஆச்சு -அலை
ஏறிவந்து கொன்றபகை இன்று தொலைந்தாச்சு

வலையை வீசடா -கடல்
அழகைப் பாரடா -கடல்
புலிகள் தந்த வாழ்க்கையென்று
வாழ்த்துப் பாடடா


காலை விடிகின்றவரையும் நீரில் மிதக்கின்றோம்
காற்றுடனே போர்தொடுத்து ஊர் திரும்புகின்றோம்
நாங்கள் கரையேறுமட்டும் பார்த்திருப்பார் பெண்கள்
வேங்கைகளை நம்பியிங்கு தூங்குதவர் கண்கள்

இந்த ஊரறியாதெங்கள் வேதனை -நாங்கள்
உண்பதுக்கெத்தனை சோதனை... சோதனை


பாய்விரித்து ஓர்இரவு மீன்பிடித்தான் பிள்ளை
பத்துமாதம் போனதையா ஏன் திரும்பவில்லை
சிங்களத்துப் பேய்களினால் பிள்ளையுயிர் போச்சு
சந்ததிக்கு வாய்த்த உடல் மீனுக்கிரையாச்சு

இது சோகங்கள் தாங்கிய தேகங்கள் -இன்று
சொந்தங்கள் வந்தால் சந்தோசங்கள்


அச்சமின்றி கடலில் ஏறி வாழ வைத்த புலிகள்
ஆண்டவரே அவராலே இல்லை உயிர்ப்பலிகள்
பிச்சையின்றி வாழவகை செய்த கடற்புலிகள்
போரில்வெற்றி காணவேண்டும் நாளை இந்தஉலகில்

நாங்கள் பாடிட மேகங்கள் ஆடுங்கள் -பிர
பாகரன் காலத்தைப் பாடுங்கள்... பாடுங்கள்

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Comments on "நீலக்கடலேறி வந்து மேனிதொடும் காற்று"

 

சொன்னது... (6/05/2006 07:36:00 AM) : 

அருமையான பாடல்.
நீண்டகாலத்தின் பின்கேட்டேன்.
பாடலுக்கு நன்றி வன்னியன்.

நெய்தல் நாடாவில் இருந்து பாடல்கள் தரமுடியுமா?

 

சொன்னது... (6/07/2006 12:04:00 AM) : 

அருமையான பாடல்.
நீண்டகாலத்தின் பின்கேட்டேன்.

 

சொன்னது... (6/07/2006 03:59:00 AM) : 

வருகைக்கு நன்றி பெயரில்லாதவரே.
நெய்தலில் இருந்து பாடல்கள் இடுவேன்.

சந்திரவதான,
வருகைக்கு நன்றி.

 

சொன்னது... (6/07/2006 05:18:00 AM) : 

வன்னியன்!

இப் பாடலை மீள்நினைவூட்டியமைக்கு நன்றி. இப்போது வரும் பாடல்களிலும் பார்க்க முன்னர் வந்த பாடல்களே எனக்கு மிகவும் பிடித்தமானவை. அதற்காக இப்போ வரும் பாடல்களில் குறையெனப் பொருள் கொள்ளத் தேவையில்லை.

 

சொன்னது... (6/07/2006 05:50:00 AM) : 

எழுதிக்கொள்வது: thuyawan

பாடலுக்கு நன்றி வன்னியன்! அவ்வாறே முல்லைச் சமர் தொடர்பான பாடல் ஒன்று! சேனைப் புலவுக்குள் ஆனை புகுந்தது போலப் புலிகள் புகுந்தனர்! என்ற வரிகளோடு அமைந்திருக்கும்!

அப்பாடலைத் தேடித் தரிகின்றேன் கிடைக்கவில்லை! இணைக்க முடியுமா?

9.10 1.6.2004

 

சொன்னது... (6/08/2006 02:58:00 AM) : 

மலைநாடான், தூயவன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மலைநாடான், எனக்கும் எண்பதுகள், தொன்னூறுகளின் தொடக்கத்தில் வந்த பாடல்களில் ஓர் ஈர்ப்பு.

தூயவன், நீங்கள் கேட்கும் பாடல் எனக்கும் மிகவும் பிடித்தது. வில்லிசை போல் ஒரு முயற்சி செய்தார்கள். தற்சமயம் என்னிடமில்லை. கிடைத்தால் தருவேன்.

 

post a comment

__________________

Google
 
Web eelapadalhal.blogspot.com

Padi Pathivu

Your Ad Here

Pooraayam
Your Ad Here

_______________