குருதி சொரிந்து கடல் சிவந்து போனது.
சிறிலங்காக் கடற்படையின் கட்டளைக் கப்பலான சாகரவர்த்தனாவை தகர்த்தழித்த கடற்கரும்புலிகள் நினைவாக வெளியிடப்பட்ட பாடலிது. 19.09.1994 அன்று கற்பிட்டிக் கடற்பரப்பில் தரித்துநின்ற இக்கட்டளைக்கப்பல் கடற்புலிகளின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது. இக்கப்பல் தகர்ப்பில் லெப்.கேணல் நளாயினி, மேஜர் மங்கை, கப்டன் வாமன், கப்டன் லக்ஸ்மன் ஆகிய கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். இக்கட்டளைக்கப்பலின் கப்டனாகப் பணியாற்றிக் கொண்டிருந்த அதிகாரி விடுதலைப்புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டார். மிக நீண்டகாலம் புலிகளின் தடுப்புக்காவலில் இருந்த இவர் பின்னர் விடுவிக்கப்பட்டார். |