Get your own calendar

Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4

Powered by Blogger

Outsourcing, IT outsourcing, and Offshore Outsource Company.
Outsourcing

________________

Click Here To Earn Money

Tuesday, March 21, 2006

திரு(க்)கோணமலை எங்கள் தலைநகர்

வணக்கம்!
கோண மலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.


ஈழப்பாடல்களில் முதலாவதாக வரும் பாடலிது.

முதலாவதாக எதைத்தரலாமென்று யோசித்ததில், தலைநகரிலிருந்தே தொடங்குவோமென்று பட்டது.

**என் அலட்டல்கள் தேவையில்லாதவர்கள் நேரடியாக கீழே சென்று பாடலின் ஒலிவடிவத்தைக் கேட்டுச் செல்லவும்;-). பாடல்வரிகளையும் கீழே தந்திருக்கிறேன்.

'திருக்கணாமலை' என்ற உச்சரிப்புடன்தான் எனக்கு திரு(க்)கோணமலையின் அறிமுகம். என் ஊரில் பொதுவாக 'திருக்கணாமலை' என்றுதான் பேச்சுவழக்கிற் சொல்வதுண்டு. (சிலவேளை 'Trinco'). எழுத்தில் 'திருகோணமலை' தான்.

பின்னர், எழுத்தில் 'திருமலை' என்ற சொற்பயன்பாடு புழக்கத்துக்கு வந்தது. இச்சொல் மனத்தில் இன்னும் ஆழமாகப் பதிந்தது, 'திருமலைச் சந்திரன்' என்ற பெயரோடு ஒருவர் இசைக்குழுக்களிற் பாடப்புறப்பட்டபோது. அதைவிட புலிகளின் பாடல்களில் இச்சொல் இடம்பெற்றது. செய்திகள், கட்டுரைகளிற்கூட 'திருமலை' என்ற சொற்பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது.

அப்போது மாவட்ட ரீதியாகவே புலிகளின் படையணிகள் பிரிக்கப்பட்டிருந்தன. அதில் திரு(க்)கோணமலை மாவட்டப் படையணி, 'திருமலைப் படையணி' என்றே பெயரிடப்பட்டிருந்தது.

யாழ் இடப்பெயர்வின் பின் வன்னியில் 'திருகோணமலை' என்ற சொற்பாவனை குறைந்து 'திருமலை' என்ற சொல்லே அதிகளவிற் பாவிக்கப்பட்டது. கூடவே 'தலைநகர்' என்ற சொல் அறிமுகத்துக்கு வந்து பயன்படுத்தப்பட்டது.

'தமிழீழத்தின் தலைநகர் திரு(க்)கோணமலை' என்ற தரவு சிறுவயதிலேயே யாழ்ப்பாணத்தில் அறிந்துகொண்டதுதான். ஆனால் அந்நகரத்தைக் குறிப்பதற்கே 'தலைநகர்' என்ற சொல் பரவலாகப் பாவனைக்கு வந்தது யாழ் இடப்பெயர்வின் பின்தான் என்று நினைக்கிறேன்.

புலிகளின் திரு(க்)கோணமலை மாவட்டப் படையணி, 'தலைநகர்ப் படையணி' என்றே அழைக்கப்பட்டது.
அதைவிட சாதாரண பேச்சுவழக்கில் அம்மாவட்டத்தைக் குறிப்பதற்கும் 'தலைநகர்' பயன்படுத்தப்பட்டது.

"வேந்தன் அண்ணா எங்காலப்பக்கம்? ஆளைக் கனநாளாக் காணேல?"
"ஆள் இப்ப தலைநகரில"
என்ற உரையாடல்களைக் கேட்க முடியும்.

திருமலைதான் எங்கள் தலைநகரமென்ற கருத்து வன்னியில் மக்களிடையே வலுவாகப் புகுத்தப்பட்டது.

****திருமலையைத் தலைநகராக அறிவித்தது புலிகள் தானா?
அல்லது தனித்தாயகம் பற்றிய வேட்கை தோன்றிய காலத்திலேயே தலைநகர் பற்றிய கருத்துக்கள், அனுமானங்கள் இருந்தனவா?
திருமலையன்றி வேறேதாவது நகரம் தலைநகராகச் சொல்லப்பட்டதா?
புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் தலைநகர் பற்றி எக்கருத்தைக் கொண்டிருந்தன?
போன்ற வினாக்களுக்கான விளக்கங்களை எதிர்பார்க்கிறேன்.
*****

இதோ, தலைநகர் மீதொரு பாடல்.
பாடல் வரிகளையும் கீழே தந்துள்ளேன்.
கேட்டுவிட்டு ஒருவரி சொல்லிவிட்டுப்போங்கள்.
(சிறிரங்கன், தனக்குப் பிடித்த பாடலாக எங்கோ சொன்ன ஞாபகம்.)

பாடலைப் பாடியவர் எல்லோரினதும அபிமானத்துக்குரிய மாவீரர் மேஜர் சிட்டு.
எழுதியது யார்? புதுவைதானே?
இசைநாடா: "இசைபாடும் திரிகோணம்"
இசை: தமிழீழ இசைக்குழு.
********************************

கடலின்_அலைவந்து.mp...






கடலின் அலைவந்து கரையில் விளையாடும்.
கரிய முகில் வந்து மலையில் சதிராடும்.
கடலின் இளங்காற்று எமது தலைசீவும்.
தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும்
கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக்
கோண மலையெங்கள் வீடு.


கோட்டை கோணேசர் வீட்டை இழப்போமா?
கொடி படைசூழ நாட்டை இழப்போமா?
மூட்டை முடிச்சோடு ஊரைத் துறப்போமோ
முன்னர் தமிழாண்ட பேரை மறப்போமா?
கோணமலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.


பாலும் தயிரோடும் வாழும் நிலைவேண்டும்.
பயிர்கள் விளைகின்ற வயல்கள் வரவேண்டும்.
மீண்டும் நாம் வாழ்ந்த ஊர்கள் பெற வேண்டும்.
மேன்மை நிலையோடு கோண மலை வேண்டும்.
கோண மலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.


வீரம் விளையாடும் நேரம் எழுவாயா?
வேங்கைப் படையோடு நீயும் வருவாயா?
தாயின் துயர்போக்கும் போரில் குதிப்பாயா?
தலைவன் வழிகாட்டும் திசையில் நடப்பாயா?
கோண மலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.





பாடலைத் தரவிறக்க

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Monday, March 20, 2006

ஈழப்போராட்டப் பாடல்கள்.

ஈழப்போராட்ட எழுச்சிப் பாடல்கள் எனக்கு நிரம்பப் பிடிக்கும். கற்றுக்குட்டி விளையாட்டு, பரீட்சார்த்த முயற்சி என்றெல்லாம் சொல்ல முடியாதபடி மிகமிக நேர்த்தியான இசையமைப்புடனும் சிறந்த குரல் வளத்துடனும் அருமையான மெட்டுக்களுடனும் நிறையப் பாடல்கள் வந்துள்ளன. இதுவரை வெளிவந்த நூற்றுக்கணக்கான பாடல்களில் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுவிட்ட பாடல்கள் ஏராளம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழ்ந்த ஒருவனுக்கு / ஒருத்திக்கு எழுச்சிப் பாடல்கள் வாழ்வோடு கலந்துவிட்ட ஒன்று.
"இந்த மண் எங்களின் சொந்தமண்"
"எதிரிகளின் பாசறையைத் தேடிப்போகிறோம்"
"பறக்குதடா யாழ் கோட்டையிலே எங்கள் புலிக்கொடி"
போன்ற பாடல்களில்லாமல் என்போன்றவர்களின் விடலைப்பருவம் முழுமைபெறாது.
ஒரு பெரிய இராணுவத்தளம் கைப்பற்றிய மகிழ்ச்சி, அதற்குரிய பாட்டு வெளிவரும்போதுதான் முழுமைபெறும்.
புலிகளின் மிகமிக முக்கியமான ஆயுதங்களிலொன்று இந்தப் பாடல்கள்.
**********************************
ஆயுதப் போராட்டம் முனைப்படையத் தொடங்கிய காலத்திலேயே எழுச்சிப் பாடல்களும் வரத் தொடங்கிவிட்டன. தொடக்கத்தில் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் சில ஒலிக்க விடப்பட்டன.

'எங்கள் தமிழினம் தூங்குவதோ
சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ?'
என்ற பாடல்,
'தோல்வி நிலையென நினைத்தால்' என்ற பாடல் போன்றன ஒலிக்க விடப்பட்டன. அதே நேரத்தில் ஒவ்வொரு இயக்கமும் தங்களுக்கென பாடல்களை இயற்றி இசையமைத்து வெளிவிடத் தொடங்கின.

எனக்கு நினைவு தொடங்கின காலத்திலேயே புலிகள் களத்தில் முனைப்புப் பெற்றுவிட்டார்கள். ஆக, எனக்கும் என் வயதொத்தவர்களுக்கும் கிடைத்த எழுச்சிப் பாடல்கள் புலிகளினது மட்டுமே. (தொடக்க காலத்தில் மற்றய இயக்கங்களால் வெளியிடப்பட்ட பாடல்களின் ஒலிவடிவங்கள் யாரிடமாவது இருந்தால் அவற்றைப் பெற ஆவலாயிருக்கிறேன்.)

புலிகளால் வெளியிடப்பட்ட முதலாவது இசைநாடா "புலிகள் பாடல்கள்". அவர்களின் தொடக்கப் பாடல்கள் தமிழகத்திலிருந்தே வெளிவந்தன.
அப்போது திரையிசையில் முன்னணியிலிருந்த பாடகர், பாடகிகளைக் கொண்டே இவ்விசைத்தட்டுக்கள் வெளிவந்தன.
டி.எம். செளந்தரராஜன், மனோ, மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், பி.சுசீலா, வாணிஜெயராம், சுவர்ணலதா என்று முதன்மை இசைக்கலைஞர்களின் குரலில் பாடல்கள் வந்தன. எல். வைத்தியநாதன் நிறையப்பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். புதுவை இரத்தினதுரை, காசி ஆனந்தன் ஆகியோரோடு தமிழகத்துக் கவிஞர் இன்குலாப் போன்றவர்களும் அப்பாடல்களை எழுதியிருந்தார்கள்.

இந்திய - புலிகள் யுத்த நேரத்திலும் தமிழகத்திலிருந்து பாடல்கள் வந்தன.
பின் தொன்னூறுகளின் தொடக்கத்தில்தான் தாயகத்தில் - குறிப்பாக யாழ்ப்பாணத்தில் எழுச்சிப் பாடல்கள் வீச்சோடு வளர்ச்சியுற்றன. முழுக்க முழுக்க உள் ஊரிலேயே பாடல்களுக்கான முழு வேலைகளும் செய்ய வேண்டிய நிலை. இயக்கத்துக்குள்ளேயே இசைக்கலைஞர்களை வளர்த்தெடுத்தார்கள். அன்றைய நேரத்தில் மட்டக்களப்பில் போராளிகளைக் கொண்டு தொடக்கப்பட்ட இசைக்குழு இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளதுடன், ஏராளமான பாடல்களை உருவாக்கியுள்ளது.

தொன்னூறுகளின் தொடக்கத்தில் அதிகமான பாடல்கள் வெளிவந்ததுடன் மிகமிக அருமையான பாடல்களும் வந்தன. மென்மையான மெட்டுக்களுடன் உணர்வுபூர்வமான பாடல்கள் வந்தன. இசையமைப்பாளர் கண்ணன் அவர்களின் மெட்டுக்களில் வந்த பாடல்களின் இனிமை என்னைக் கவர்ந்தது. இந்த நேரத்தில்தான் 'சிட்டு' என்ற அருமையான பாடகன் இனங்காணப்பட்டான். அந்தக் குரலுக்குரிய வசீகரமும் நயமும் வேறிடத்தில் நான் கண்டதில்லை. ஏறத்தாழ 75 பாடல்கள் வரை பாடிய அந்தப் போராளி இறுதியில் சமர்க்களமொன்றில் மடிந்துபோனது ஈழத்து எழுச்சிப்பாடல்களுக்கு 'ஈடு செய்யமுடியாத இழப்பு'.

இப்பாடல்களில் அனைத்துவகைகளுமுள்ளன.
கள வெற்றியைக் கொண்டாடும் பாடல்கள்,
வீரச்சாவடைந்த தோழர்களை நினைவுகூரும் பாடல்கள்,
படுகொலைகளை நினைவுகூரும் பாடல்கள்,
இடப்பெயர்வுச் சோகங்களைச் சொல்லும் பாடல்கள்,
போருக்கு அறைகூவல் விடுக்கும் பாடல்கள்
என்று அனைத்துக்கூறுகளுமுண்டு.
பொப்பிசைப் பாடல்கள்கூட புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன.

ஈழத்து எழுச்சிப் பாடல்களில் பங்காற்றிய கலைஞர்களிற் பெரும்பான்மையானோர் சும்மா தொழில் முறைக்காக இதில் ஈடுபட்டவர்களல்லர். இவர்களில் நிறையப்பேர் போராளிகள். பாடல் எழுதுபவன், இசையமைப்பவன், பாடுபவன் என்று அனைவருமே போராளிகளாக இருந்த நிறையப் பாடல்களுள்ளன. இவற்றில் பங்குகொண்ட பொதுமக்கள் கூட தன்னலமற்ற மக்கட்போராளிகளே. இந்தக்கூறுகள் இயல்பாகவே இப்பாடல்களுக்கான வலுவை அதிகரிக்கின்றன.
அண்மையிற்கூட எஸ்.பி.பாலசுப்பிரமணியம், உன்னிகிருஷ்ணன், ஹரிகரன், சித்ரா என்று முன்னணி திரையிசைக் கலைஞர்கள் பாடிய ஈழவிடுதலைப்போராட்ட ஆதரவுப் பாடல்கள் வெளிவந்தன. ஆனால் எங்கள் கலைஞர்கள் பங்குபற்றிய எந்தப்பாடல்களுக்குமிருக்கும் வலு அப்பாடல்களுக்கில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின் நிறையப் பொறுப்புக்கள் போராளிக் கலைஞர்களில் தங்கிவிட்டது. என்னதான் பொருளாதார, நேர, ஆளணி நெருக்கடிகள் இருந்தாலும் எழுச்சிப்பாடல்கள் வெளிவருவது நிற்கவேயில்லை. அதுதான் போராட்டத்தை வாழ்வித்தது. அதுதான் புலிகளின் முக்கிய பரப்புரை ஆயுதம். இதற்கிடையில் இசைத்தட்டு வெளியிடாமல் வீதி நாடகங்களாக நிறையப் பாடல்கள் மக்கள் மத்தியில் உருவாயின. பழைய நாட்டுப்புற மெட்டுக்கள் வீதி நாடகங்கள் வழியாக மீண்டும் மக்களிடம் சென்றன. ஆனாலும் தமிழ்திரையிசையைப் படியெடுத்துச் சிலர் செய்த கூத்துக்களால் வேண்டத்தகாத சில பாடல்களும் வந்து சேர்ந்தன. தனித்தன்மை ஓரளவு குலையத் தொடங்கியது தொன்னூறுகளின் இறுதியில்தான். ஆனாலும் மக்கள் மத்தியில் அவற்றுக்கு வரவேற்பு இருந்ததென்னவோ உண்மைதான்.

கவிஞர்கள், பாடகர்கள் என போராளிக் கலைஞர்கள் பலர் இதுவரை களத்தில் வீரச்சாவடைந்து விட்டார்கள். இவர்களில் சிலர் கரும்புலிகள் (வெளியுலகப் பார்வையில் தற்கொலைப் படையாட்கள்). இவர்களைப் பற்றியும் அவ்வப்போது எனக்குத் தெரிந்த குறிப்புக்களைத் தர முயல்கிறேன்.
அதிகம் அலட்டி விட்டேன். அடுத்த பதிவில் பாடலொன்றுடன் சந்திக்கிறேன்.


நன்றி.

**************************

மேஜர் சிட்டு அவர்கள்.



படங்கள் பெறப்பட்டது
இங்கிருந்து



Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Friday, March 17, 2006

தேவை.

ஏற்கெனவே மாவீரர் சிட்டு அவர்களைப் பற்றி எழுதப்பட்ட பதிவொன்று
வசந்தன் பதிவிலிருக்கிறது.
*********************
யாரிடமாவது சிட்டண்ணையின் படமிருந்தால் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



அறிமுகம்

வணக்கம்.

இது ஈழத்துப் பாடல்களுக்கான வலைப்பதிவு. ஒலிப்பதிவாகவோ, தனியே எழுத்துவடிவமாகவோ அவற்றை இவ்வலைப்பதிவில் இடும் எண்ணமுண்டு.
ஈழத்துப்பாடல்களெனும்போது அது பரந்த தளத்தைக் கொண்டது. நாட்டார் பாடல்கள், கூத்துப்பாடல்கள், பொப்பிசைப் பாடல்கள், பக்திப் பாடல்கள், தென்னக, மலையக மக்களின் பாடல்களென்று பரந்த தளத்தைக் கொண்டது.

எனினும் இவ்வலைப்பதிவில் இப்போது என்னிடமிருக்கும் ஈழப்போராட்டப் பாடல்களில் சிலவற்றைத் தெரிந்தெடுத்துப் போடுவதாக இருக்கிறேன். ஏனைய பாடல்கள் கிடைக்கப்பெற்றால் அவற்றையும் பகிர்ந்து கொள்ள எண்ணமுண்டு.

இதுவொன்றும பெரிய முயற்சியில்லை. சும்மா ஒரு விளையாட்டுத்தான்.



நன்றி.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



__________________

Google
 
Web eelapadalhal.blogspot.com

Padi Pathivu

Your Ad Here

Pooraayam
Your Ad Here

_______________