26.09.2001 அன்று எதிரியின் ஊடுருவித் தாக்குதற் படையணியாற் கொல்லப்பட்ட புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர் கேணல் முகிலன் என்ற சங்கர் அவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட இன்னொரு பாடலை இங்குத் தருகின்றேன்.
26.07.2001 அன்று வன்னியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவினரின் தாக்குதலில் வீரச்சாவடைந்த கேணல் முகிலன் என்ற சங்கரின் நினைவாக வெளியிடப்பட்ட பாடல்.
சேதனை தாண்டி வந்தாடிய வானர காலத்திலே காலத்திலே காத்த வீரன் - சங்கர் சோதனை சூழ்ந்திடும் வேளையில் எங்களின் தலைவனை தாங்கிய தோழன்
முகிலேறி விளையாடும் நினைவாகினாய் -எங்கள் முதலோனின் நிழலாகி உறவாடினாய் விழிமூடி துயிலாத காற்றாகினாய் - அண்ணன் விடுகின்ற மூச்சே உன் பேச்சாகினாய் விரித்ததோர் விடுதலைச் சிறகு - எங்கள் தலைவனுக் குயிர் எனும் உறவு
பெரிதான படையொன்றை உருவாக்கினாய் -எந்த புயலுக்கும் அசையாத மலையாகினாய் பகைதாட்ட வெடிமீது உடல் வீழ்த்தினாய் - வான் படையேறும் கனவோடு உயிர் போக்கினாய் அழகான சிரிப்புந்தன் சிரிப்பு -ஐயோ அதன்மேலே போட்டானே நெருப்பு
அணையாத ஒருதீபம் எனவாகினாய் - தினம் அதிகாலை எனவாகும் பொழுதாகினாய் ஒருநாளும் மறவாத அழகாகினாய் - தமிழ் உறவெல்லாம் அழநீயோ விழிமூடினாய் நெஞ்சினில் வழிவதோ குருதி - நாளை நெருப்பினில் பகைவிழும் உறுதி
19.09.1994 அன்று கற்பிட்டிக் கடற்பரப்பில் "சாகரவர்த்தனா" என்ற கட்டளைக் கப்பல் கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது. இத்தாக்குதலில் நளாயினி, மங்கை, வாமன், லக்ஸ்மன் ஆகிய நான்கு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். இத்தாக்குதலின் போது அக்கப்பல் முற்றாக மூழ்கடிக்கபட்டது. அக்கப்பலின் கப்டன் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டார். நீண்டகாலத்தின்பின் சில வருடங்களின் முன் புலிகளால் விடுவிக்கப்பட்டார்.
அக்கடற்கரும்புலிகள் நினைவான வெளியிடப்பட்ட பாடல் இது. பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: கடற்கரும்புலிகள் -1.
குருதி சொரிந்து கடலின் உடலும் சிவந்து போனதே குயில்கள் பர்டும் இராகம் யாவும் சோகமானதே எரியும் தீயில் கரிய புலிகள் உருகிப் போனதேன் எமது தலைவன் விழியில் அருவி சொரியலானதேன்
கடலின்அரசன் சிதறும்வகையில் வெடிகள் சுமந்து போனீர் கரையில்இருந்த உறவுகலைய சிறகு விரித்துப் போனீர் படங்களாகி சுவர்கள் யாவும் உயர்ந்து சிரிக்கும் வீரரே பகைவன் ஏறும் பெரிய கலத்தை எரித்து முடித்த தீரரே
அலைகள்அசையும் வகையில்பகையை முடித்த வீரப்பெண்களே மகளிர்படையின் வலிமைஉலகில் தெரிய விழித்த கண்களே அலைகள் மீதில் உலவும் பகையை அடித்த கரிய வேங்கைகள் அவர்கள்தலைவன் ஒருவன்தலையைப் பிடித்து வந்த தங்கைகள்
உலகமெங்கும் திரியும் காற்றில் உமது மூச்சும் கலந்திடும் உரிமைகேட்டு நிமிரும்போதில் உமது தீரம் விளங்கிடும் தலைவன்காட்டும் வழியில்புலிகள் பகையை வென்று திரும்பிடும் தமிழர்தேசம் உமதுபெயரை தினமும் பாடி வணங்கிடும்