போரென்று படைகொண்டு எல்லைக்குள் நுழைந்தாயா
பார்வதி சிவபாதம் அவர்களின் குரலில் வெளிவந்த இன்னொரு பாடல். என்னைக் கவர்ந்த பாடல்களில் இதுவுமொன்று. போரென்று படைகொண்டு எல்லைக்குள் நுழைந்தாயா -தமிழன் புறமிட்டு களமஞ்சி மண்விட்டு மறைந்தானா? நீருண்டு நெல்லுண்டு நிறைவாக நம்நாட்டில் -நாங்கள் நெருப்புண்டு கள்ளுண்டு நிற்போமா உன்கூட்டில் தேனோடு பாலுண்டு பழமுண்டு பலவாகும் தினையோடு பனைதெங்கும் இந்நாட்டின் வளமாகும் மீனோடி முக்குண்டு முத்துண்டு மலைபோல மிளிர்கின்ற புலிவீரர் திறமிங்கு உரமாக தேசத்தின் தொழிலுண்டு வரியுண்டு நாம்வாழ -வேங்கை செத்தாலும் விடுவானா ஈழத்ததை நீஆள மாசற்ற தலைவன்தன் மறைகேட்டு புலியாகி மண்மீட்க முன்வந்தார் பலவீரர் அணியாகி மழலைதாம் சொல்கின்ற பிள்ளைகள் பலவாக -பிரபா மடிமீது வளர்கின்றார் வரிகொண்ட புலியாக தமிழீழம் மீளாமல் போரிங்கு ஓயாது தமிழ்வாழும் தேசத்தில் தன்மானம் சாயாது. Labels: பார்வதி சிவபாதம் |