Get your own calendar

Powered by Blogger

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4

Powered by Blogger

Outsourcing, IT outsourcing, and Offshore Outsource Company.
Outsourcing

________________

Click Here To Earn Money

Sunday, July 30, 2006

போரென்று படைகொண்டு எல்லைக்குள் நுழைந்தாயா

பார்வதி சிவபாதம் அவர்களின் குரலில் வெளிவந்த இன்னொரு பாடல்.
என்னைக் கவர்ந்த பாடல்களில் இதுவுமொன்று.





போரென்று படைகொண்டு எல்லைக்குள் நுழைந்தாயா -தமிழன்
புறமிட்டு களமஞ்சி மண்விட்டு மறைந்தானா?
நீருண்டு நெல்லுண்டு நிறைவாக நம்நாட்டில் -நாங்கள்
நெருப்புண்டு கள்ளுண்டு நிற்போமா உன்கூட்டில்

தேனோடு பாலுண்டு பழமுண்டு பலவாகும்
தினையோடு பனைதெங்கும் இந்நாட்டின் வளமாகும்
மீனோடி முக்குண்டு முத்துண்டு மலைபோல
மிளிர்கின்ற புலிவீரர் திறமிங்கு உரமாக

தேசத்தின் தொழிலுண்டு வரியுண்டு நாம்வாழ -வேங்கை
செத்தாலும் விடுவானா ஈழத்ததை நீஆள
மாசற்ற தலைவன்தன் மறைகேட்டு புலியாகி
மண்மீட்க முன்வந்தார் பலவீரர் அணியாகி

மழலைதாம் சொல்கின்ற பிள்ளைகள் பலவாக -பிரபா
மடிமீது வளர்கின்றார் வரிகொண்ட புலியாக
தமிழீழம் மீளாமல் போரிங்கு ஓயாது
தமிழ்வாழும் தேசத்தில் தன்மானம் சாயாது.

Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Wednesday, July 26, 2006

பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது

இதுவோர் திரைப்படப்பாடல்.
யாழ்ப்பாணத்தில் வெளிவந்த 'பிஞ்சு மனம்' என்ற திரைப்படத்தில் வந்த பாடல்.
தனிமையில் வாடும் முதியவர் ஒருவரின் ஆதங்கத்தைச் சொல்கிறது இப்பாடல்.
பாடியவர் குமாரசாமி.





பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது
பூங்குருவி துணைகளின்றி துடிக்கின்றது
ஆலமரம் வேர்களின்றி அலைகின்றது
அந்திமத்தில் யாருமின்றி அழுகின்றது

ஆற்றினிலே நீருமில்லை ஆதரிப்பார் யாருமில்லை
நேற்றிருந்த சொந்தமில்லை நேரினிலே இன்று இல்லை

நாய்வளர்த்து பாலைவார்த்தால்
வாலை ஆட்டிக்கொள்ளும்
நம்பிப் பெற்ற பிள்ளைகளோ
நன்றியினைக் கொல்லும்
கோவிலுண்டு பூசை செய்ய யாருமிங்கு இல்லை
கொள்ளியிடக் கூடவொரு பிள்ளையிங்கு இல்லை

கட்டிலுக்கு வந்தவளும்
என்னை விட்டுப் போனாள்
தொட்டில்வந்த பிள்ளைகளோ
தூரதேசம் போனார்
விட்டபடி சுற்றுதடா பூமியென்ற பந்து
இரத்த பாசம் என்பதெல்லாம் இங்கு வெறும் பேச்சு

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Wednesday, July 19, 2006

மறவர் படைதான் தமிழ்ப்படை

காசி ஆனந்தன் அவர்களின் பாடல். இது இரண்டாம் முறையாக இசையமைக்கப்பட்ட பாடல். இக்கவிதை ஆயுதப்போராட்டத்துக்கு முன்பேயே எழுதப்பட்டது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். சரியாகத் தெரியவில்லை.
அப்படியானால் 'புலிப்படை' என்ற சொல் பின்பு மாற்றப்பட்டதா என்றும் தெரியவில்லை.
ஆனால் காசி ஆனந்தன் அவர்கள் ஆயுதப்போராட்டம் தொடங்குவதற்கு முன்பே, புலிப்படை, புலி என்பவற்றைப் பாவித்து எழுதியுள்ளார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. 'தமிழன் கனவு' என்ற நூலில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கின்றன.






மறவர் படைதான் தமிழ்ப்படை -குல
மானமொன்று தான் அடிப்படை
வெறிகொள் தமிழர் புலிப்படை -அவர்
வெல்வார் என்பது வெளிப்படை

புதிதோ அன்று போர்க்களம் -வரும்
புல்லர் போவார் சாக்களம்
பதறிப்போகும் சிங்களம் -கவி
பாடிமுடிப்பார் மங்களம்

சிரிக்கும் உள்ளம் போர் கண்டு -தமிழ்
சேய்க்கும் சண்டை கற்கண்டு
உரத்து தமிழை போய்முண்டு -என
துள்ளும் நாக்கும் இருதுண்டு

தமிழன் பண்பில் உருப்படி -அவன்
தலையும் சாய்ப்பான் அறப்படி
அமையும் தன்னை முதற்படி -பிறர்
அடக்க வந்தால் செருப்படி

வீரம் வீரம் என்றாடு -நீ
வேங்கை மாற்றான் வெள்ளாடு
சீறும் பாம்பை வென்றாடு -கண்
சிவந்து நின்று போராடு
___________________________

பாடலைத் தரவிறக்க

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Monday, July 10, 2006

புதிய வரலாறு எழுதும் புலிவீரர்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலை நடத்திய காந்தரூபன், வினோத், கொலின்ஸ் ஆகியோரையும், அதன்பின் வேறொரு தாக்குதலில் வீரச்சாவடைந்த சிதம்பரம், ஜெயந்தன் ஆகியோரையும் நினைவுகூர்ந்து பாடப்பட்ட பாடல்.
நெய்தல் இசைநாடாவில் இடம்பெற்றது இப்பாடல்.

1991ஆம் ஆண்டு இன்றைய நாளில்தான் (10.07.1990) முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.






காந்தரூபன் வாழுகின்ற கடலிது
கொலின்ஸ் கால்பதித்து நடைபயின்ற நிலம் இது
நீந்தி வினோத் ஆடிநின்ற அலையிது
ஜெயந்தன் சிதம்பரத்தின் உயிர்களுக்கு
விலையேது விலையேது

புதிய வரலாறு எழுதும் புலிவீரர்
புகழை உலகெங்கும் கூவு -அவர்
உதிரம் சொரிகின்ற உணர்வைக் கவியாக்கி
உரத்த குரலெடுத்து பாடு பாடு பாடு

எதிரி வருவானா கரையைத் தொடுவானா
என்று புயலாகி நின்றோம் -புலி
அதிரும் வெடியோடு கடலில் நடைபோடும்
அணியில் துணையாகி வென்றோம்
உலகத் திசையாவும் தமிழன் அரசாளும்
நிலைமை வருமிங்கு ஒருநாள் -கடல்
புலிகள் படைசென்று பகைவர் படைவென்று
புலரும் தினமன்று திருநாள்

கடலின் கரையோரம் தலைவன் உருவாகி
கால்கள் நடைபோட வந்தான் -பெரும்
தடைகள் எதுவந்த போதும் அவன்காலில்
உடையும் எனச்சொல்லி வென்றான்
பூவும் புயலாகி பாயும் புலியாகி
போரில் குதித்துள்ள நாடு -தமிழ்
ஈழம் உருவாகும் வேளை இதுவாகும்
என்று களம்நோக்கி ஓடு

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



Wednesday, July 05, 2006

வேர்கள் வெளியினில் தெரிவதில்லை

இதுவும் வர்ண.இராமேஸ்வரனின் குறிப்பிடத்தக்க பாடல்.
ஏற்கனவே மறைமுகக் கரும்புலிகள் பற்றி சிறு விளக்கக் குறிப்பொன்றும் காலநதியோடுகின்ற என்ற பாடலும் பதிந்திருந்தேன்.
மறைமுகக் கரும்புலிகள் பற்றிய இன்னுமொரு பாடல்.


கரும்புலிகள் நாளான இன்று பொருத்தம் கருதி இப்பாடலை இடுகிறேன்.

பாடல்வரிகள்: புதுவை இரத்தினதுரை.
பாடியவர்: வர்ண. இராமேஸ்வரன்.





வேர்கள் வெளியினில் தெரிவதில்லை -சில
வேங்கைகள் முகவரி அறிவதில்லை
பெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை -கரும்
புலிகளின் கல்லறை வெளியில் இல்லை.

காலப் பெருவெளி நீளும் பொழுதிலும்
கண்ணில் தெரிவதுமில்லை -இங்கு
வாழும் தலைமுறை சாகும் கரும்புலி
வாழ்வை அறிவதுமில்லை -இவர்
வாசம் புரிவதுமில்லை

கட்டி அணைத்தொரு முத்தம் அளித்துமே
கைகள் அசைத்திட்டுப் போவார் -ஒரு
தொட்டில் வளர்ந்தவர் தோளில் சுமந்தவர்
சொல்லி புறப்பட்டுப் போவார் -எங்கள்
தோழர் நெருப்பென ஆவார்

நொடியில் ஒருபெரும் வெடியுடன் கரும்புலி
நெருப்புடன் சங்கமமாகும் -எங்கள்
விடிவினுக்காகவே இடியென எதிரியின்
முடிவுடன் அவருடல் சாயும் -அவர்
மூச்சும் பெரும் புயலாகும்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

சுரதா, கிருபாவுக்கு நன்றி


பெயர்



__________________

Google
 
Web eelapadalhal.blogspot.com

Padi Pathivu

Your Ad Here

Pooraayam
Your Ad Here

_______________