ஆனையிறவு என்பது ஈழத்தமிழர் மனங்களில் நீங்கா இடம்பெற்ற ஓரிடம். சொல்லொன்னாத் துயரங்களை எமக்குத் தந்த இடமது. ஆனால் அது எதிரியின் கையில் இருக்கும்வரைதான் தமிழர்க்குத் துன்பம். 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் தமிழர்சேனையிடம் அப்படைத்தளம் முழுமையாக வீழ்ந்தபோது உலகெங்கும் வாழும் ஈழத்தமிழினம் ஆனந்தக் கூத்தாடியது. ஈழத்தமிழரின் போராட்ட வரலாற்றில் அதிக துன்பங்களைத் தந்ததும், எமது கைகளில் வீழ்ந்தபோது அதிக மகிழ்ச்சி தந்ததும் இப்படைத்தளம்தான்.
ஆனையிறவுப் படைத்தள வெற்றிக்கு விதையான மாவீரரை நினைத்துப் பாடப்பட்ட பாடல் இது.
உப்புத் தரவையெங்கும் உங்களின் குருதி -இந்த உப்பளக் காற்றினிலே உங்கள் சுருதி எப்பொழுதும் கேட்கும் உங்கள் குரலே -நீங்கள் எழுந்தே வரவேண்டும் எங்களின் அருகே
ஆனையிறவு என்பது ஈழத்தமிழர் மனங்களில் நீங்கா இடம்பெற்ற ஓரிடம். சொல்லொன்னாத் துயரங்களை எமக்குத் தந்த இடமது. ஆனால் அது எதிரியின் கையில் இருக்கும்வரைதான் தமிழர்க்குத் துன்பம். 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் தமிழர்சேனையிடம் அப்படைத்தளம் முழுமையாக வீழ்ந்தபோது உலகெங்கும் வாழும் ஈழத்தமிழினம் ஆனந்தக் கூத்தாடியது. ஈழத்தமிழரின் போராட்ட வரலாற்றில் அதிக துன்பங்களைத் தந்ததும், எமது கைகளில் வீழ்ந்தபோது அதிக மகிழ்ச்சி தந்ததும் இப்படைத்தளம்தான்.
ஆனையிறவுப் படைத்தள வெற்றியின் களிப்பில் பாடப்பட்ட பாடல் இது.
ஆனந்தப் பூங்காற்று காதினிலே வந்து ஆலோலம் ஆலோலம் பாடுதம்மா இன்று ஆனையிறவிலே ஏறிடும்போதிலே ஆகா எம் கைகளில் ஆடுதம்மா உப்புக்கடலே உப்பளக்காற்றே உம்மைத் தழுவுகின்றோம் ஊருக்குப் போகின்ற வீதியில் ஏறிட ஏனோ அழுகின்றோம்
வீடிழந்து ஊரிழந்து ஓடிவந்தவர் -நாங்கள் வீதியெங்கும் நாதியற்று வெந்து நொந்தவர் போருக்கென்றும் ஆதரவாய் நாமிருந்தவர் -எல்லை படையாகிப் புலியோடு நின்றவர் எம் தலைவா எங்களுடன் நின்று எடுத்தாய் -மீண்டும் எங்கள் ஊரில் சென்றுவாழ தெம்பு கொடுத்தாய் ஆவிஉடல் யாவுமுமக் காகக்கொடுத்தோம் -தம்பி அச்சமின்றி உம்மருகில் என்றுமிருப்போம்
வாழ்வளித்த வன்னிமண்ணே உன்னைக் கொஞ்சவா -நாங்கள் பட்டகடன் உந்தனுக்கு கொஞ்ச நஞ்சமா காலெடுத்து வந்தபகை வென்றவீரரே - உங்கள் கையெடுத்து முத்தமிட கையைத் தாருமே - மீதமுள்ள ஊர்களையும் நாளை பிடிப்போம் -எங்கள் ஊரிலேறி வந்தபகை யாவும் துடைப்போம் நாளை தமிழ் ஈழமென நம்பியிருப்போம் -அந்த நாடு வரும் நேரத்திலே நின்று சிரிப்போம்
1995 இன் தொடக்கத்தில் தற்காலிக யுத்தநிறுத்தமொன்று வந்து சந்திரிகா அரசுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் என்பதைவிட அரசால் அனுப்பப்பட்ட தூதுவர்களுடன் பொழுதுபோக்காகக் கதைத்தார்கள் என்று சொல்லலாம். பின் பேச்சுவார்த்தை முறியும் நிலைக்கு வந்தது. வடபகுதி மீதான பொருளாதாரத்தடையைக்கூட நீக்க அரசு முன்வரவில்லை. இந்நிலையில் புலிகள் போரைத் தொடக்கினர். அது மூன்றாம்கட்ட ஈழப்போர் என்று அழைக்கப்படுகிறது. இலங்கை அரசபடைக்கு பெரியதொரு அழிவை ஏற்படுத்திய தாக்குதலோடு அப்போர் தொடங்கியது.
திரு(க்)கோணமலைத் துறைமுகத்தில் நின்ற மூன்று கடற்கலங்களை அழித்து அப்போர் தொடங்கப்பட்டது. அக்கலங்களை அழித்து வீரச்சாவடைந்தவர்கள் நீரடிநீச்சற்பிரிவைச் சேர்ந்த கடற்கரும்புலிகளான மேஜர் தணிகைமாறன், மேஜர் கதிரவன், மேஜர் மதுசா, கப்டன் சாந்தா.
இவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட பாடலே இது. மேஜர் சிட்டுவின் உருக்கமான குரலில் இப்பாடல் வெளிவந்துள்ளது.
19.04.1995 அன்று திருமலைத் துறைமுகத்துள் விடுதலைப்புலிகளால் பாரியதொரு தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதல்தான் மூன்றாம்கட்ட ஈழப்போரைத் தொடக்கி வைத்தது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் ஈழத்தின் கடற்கரையோரங்களில் வாழ்ந்தவர்களுக்கு சூரயா, வீரயா போன்ற போர்க்கலங்களின் பெயர்களைத் தெரியாமலிருக்க முடியாது. அடிக்கடி இக்கலங்களின் தாக்குதலுக்கு முகங்ககொடுக்க வேண்டியிருந்தது. இக்கலங்கள் தமிழர்களிடத்தில் மிகக் கடுமையான இழப்புக்களை மட்டுமன்றி பெரும் பயத்தையும் ஏற்படுத்தியிருந்தன. இவற்றில் சூரயா கடற்கலம் திருமலைத்துறைமுகம் மீதான புலிகளின் கரும்புலித் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது. இத்துடன் ரணசுறு கடற்கலமும் இன்னொரு கடற்கலமும் மூழ்கடிக்கப்பட்டன. இக் கரும்புலித்தாக்குதலை நடத்தி நான்கு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். மதுசா, சாந்தா, தணிகைமாறன், கதிரவன் ஆகிய கடற்கரும்புலிகளே இத்தாக்குதலை நடத்தி வீரச்சாவடைந்தனர்.
இவ்வெற்றியைக் கொண்டாடும் பாடல்தான் இவ்விடுகையில் வரும் பாடல். பாடியவர் திருமலைச்சந்திரன். பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: இசைபாடும் திரிகோணம்.
கொழும்புத் துறைமுகத்தில் 1996 இல் விடுதலைப்புலிகளின் கடற்கரும்புலிகள் தாக்குதல் நடத்தி சில கடற்கலங்களை அழித்த தாக்குதலின் நினைவாக வெளிவந்த பாடலிது. 12.04.1996 அன்று அதிகாலை கொழும்புத் துறைமுகத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
பாடல் இடம்பெற்ற ஒலிநாடா: கடற்கரும்புலிகள் பாகம் -3 பாடியவர்: சிட்டு இசையமைப்பு: முரளி பாடல்வரிகள்: புதுவை இரத்தினதுரை _____________________________________________